தேபார் ஏரி

ஆள்கூறுகள்: 24°16′N 74°00′E / 24.267°N 74.000°E / 24.267; 74.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்சமந்த் ஏரி
தேபார் ஏரி
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சமந்த் ஏரியின் இருப்பிடம்
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சமந்த் ஏரியின் இருப்பிடம்
ஜெய்சமந்த் ஏரி
ரூத்தி ராணி அரண்மனையின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட ஜெய்சமந்த் ஏரியின் நீட்டிக்கப்பட்ட காட்சியைக் காட்டும் படம்..
அமைவிடம்சலும்பர், இராசத்தான்
ஆள்கூறுகள்24°16′N 74°00′E / 24.267°N 74.000°E / 24.267; 74.000
ஏரி வகைநீர்த்தேக்கம்
பூர்வீக பெயர்ढेबर झील, जयसमंद झील (இந்தி)
முதன்மை வரத்துகோமதி ஆறு
முதன்மை வெளியேற்றம்கோமதி ஆறு
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்9 mi (14 km)
மேற்பரப்பளவு87 km2 (34 sq mi)
அதிகபட்ச ஆழம்160 அடி (49 m)
கரை நீளம்130 mi (48 km)
Islands3 தீவுகள்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

தேபார் ஏரி (Dhebar Lake) ( ஜெய்சமந்த் ஏரி என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் முதல் மற்றும் உலகின் பழமையான வரலாற்று மற்றும் இரண்டாவது பெரிய செயற்கை நன்னீர் ஏரி ஆகும். இது மேற்கு இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தின் சலும்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 87 கிமீ2 (34 ச.மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டில், உதய்ப்பூரின் மகாராணா ஜெய் சிங் கோமதி ஆற்றின் குறுக்கே ஒரு பளிங்கு அணையைக் கட்டியபோது, நம்லா திகானாவில் (ரத்தோர்-பத்வி) ஏரி உருவாக்கப்பட்டது.[1] இது சலூம்பர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 19 கிமீ (12 மைல்) தொலைவில் உள்ளது. முதலில் கட்டப்பட்டபோது, இது உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரியாக இருந்தது. ஏரியைச் சுற்றியுள்ள ஜெய்சமந்த் வனவிலங்கு சரணாலயத்தை உதய்பூரிலிருந்து பான்ஸ்வாரா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடையலாம். ஜெய்சமந்த் வனவிலங்கு சரணாலயம் சுமார் 162.0 சதுர கிலோமீட்டர் (16,200 எக்டர்) நிலத்தை பாதுகாக்கிறது, தேபார் ஏரியின் கரையில் பெரும்பாலும் தேக்கு மரக்காடுகளாகவே கணப்படுகின்றன. இந்த ஏரியில் 10 முதல் 40 ஏக்கர்கள் (40,000 முதல் 162,000 m2) அளவுள்ள மூன்று தீவுகள் உள்ளன. ஒவ்வொன்றும். தேபார் ஏரி பளிங்கு அணை 300.0 m (984.3 அடி) நீளமானது. மேலும் இது "இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களின்" ஒரு பகுதியாகும். இந்த அணையில் ஹவா மகால் அரண்மனையும் உள்ளது. 1687 முதல் 1691 வரை இது மேவாரின் முன்னாள் மகாராணாக்களின் குளிர்கால தலைநகரமாக இருந்தது.

வரலாறு[தொகு]

தேபார் ஏரியின் தோற்றம்

1685 இல் மகாராணா ஜெய் சிங்கால் கட்டப்பட்ட தேபார் ஏரி, 36 சதுர மைல்கள் (93 km2) பரப்பளவைக் கொண்டுள்ளது. 1902 இல் ஆங்கிலேயர்களால் எகிப்தில் அஸ்வான் அணையைக் கட்டும் வரை, 1960-1970 க்கு இடையில் புனரமைக்கப்பட்ட இந்த ஏரி உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரியாக இருந்தது. மகாராணா ஜெய் சிங்கின் (1680-1698) ஆட்சியின் போது, மேவாரின் தென்கிழக்கு மூலையில் சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்பட்டது. மகாராணா தனது தந்தையை ( ராஜ்சமந்த் ஏரியை கட்டிய மகாராணா முதலாம் ராஜ் சிங்) கோமதி என்ற சிறிய ஆற்றில் 36.6 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பெரிய அணையை கட்டினார்; ஏரிக்கு ஜெய்சமந்த் ஏரி (ஜெய் என்றால் 'வெற்றி', 'சமந்த்' என்றால் 'கடல்') என்று பெயரிட்டார். 1691 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்பட்ட நாளில், மகாராணா ஜெய் சிங் தனது எடைக்கு சமமான தங்கத்தை தானமாக வழங்கினார். ஏரியின் புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது - 9 மைல்கள் (14 கிமீ) அகலம், 102 அடி (31 மீ) ஆழமான அதன் ஆழமான முடிவில், 30 மைல் (48 கிமீ) சுற்றளவு, தண்ணீருக்குள் செல்லும் பளிங்கு படிக்கட்டுகள் என ஏரியின் புள்ளிவிவரங்கள் இருக்கிறது. உதய்பூர் ராணிகளின் கோடைகால அரண்மனைகள் அனைத்து பக்கங்களிலும் தேபார் ஏரியைச் சுற்றியே அமைக்கப்பட்டன. நம்லா திகானாவினரின் நில பங்களிப்பிற்காக ஜெய் சிங் நன்றி கூறினார்.[2]

சிறப்பியல்புகள்[தொகு]

ஏரியில் மூன்று தீவுகள் உள்ளன. பில் மினாஸ் பழங்குடியினர் அனைத்திலும் வசிக்கின்றனர். இரண்டு பெரிய தீவுகள் பாபா கா மக்ரா என்றும் சிறிய தீவு பியாரி என்றும் அழைக்கப்படுகிறது. ஏரியில் 1,202 அடி (366 மீ) நீளம், 116 அடி (35 மீ) உயரம் மற்றும் அடிவாரத்தில் 70 அடி (21 மீ) அகலம் கொண்ட கரை உள்ளது. பளிங்கு அணையில் ஆறு கல்லறைகளும் மையத்தில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது. மேலும் , ஏரியில் பளிங்கினாலான இந்திய யானையின் சிலை ஒன்றும் அமைந்துள்ளது. ஏரியின் வடக்கு முனையில் ஒரு முற்றத்துடன் ஒரு அரண்மனை உள்ளது. அதன் தெற்கு முனையில் 12 தூண்கள் கொண்ட ஒரு காட்சிக் கூடம் உள்ளது. அதன் தெற்கே உள்ள மலைகள் பெரிய அரண்மனைகளைக் கொண்டுள்ளன. அவை ஏரியின் சிறந்த காட்சியை வழங்குனின்றன.

ஜெய்சமந்த் வனவிலங்கு சரணாலயம்[தொகு]

ஜெய்சாமந்த் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள . விலங்கினங்களில் இந்தியச் சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், நாற்கொம்பு மான், கீரி மற்றும் பல்வேறு வகையான புலம்பெயர்ந்த பறவைகள் ஆகியன அடங்கும். சரணாலயத்தின் சுற்றுச்சூழல் பகுதி காதியர்-கிர் உலர் இலையுதிர் காடுகள் ஆகும்.[3]

ஜெய்சமந்த் ஏரியின் தோற்றம்
ஜெய்சமந்த் ஏரியின் தோற்றம்

சான்றுகள்[தொகு]

  1. Not Available (1907). Rajputana Agency Political Branch. http://archive.org/details/in.ernet.dli.2015.36062. 
  2. Not Available (1907). Rajputana Agency Political Branch. http://archive.org/details/in.ernet.dli.2015.36062. 
  3. "Khathiar-Gir dry deciduous forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபார்_ஏரி&oldid=3800651" இலிருந்து மீள்விக்கப்பட்டது