தொல். திருமாவளவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎நூல்கள்: பராமரிப்பு using AWB
வரிசை 46: வரிசை 46:
===நூல்கள்===
===நூல்கள்===
* [[முள்வலி]]
* [[முள்வலி]]
அமைப்பாய்த் திரள்வோம்
*அமைப்பாய்த் திரள்வோம்
*கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)

கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)


==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==

11:54, 23 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

முனைவர் தொல். திருமாவளவன்
படிமம்:Thol. Thirumavalavan.jpg
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
31 சூலை 2009 – 17 மே 2014
முன்னையவர்எ. பொன்னுச்சாமி
பின்னவர்எம். சந்திரகாசி
தொகுதிசிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஆகத்து 1962 (1962-08-17) (அகவை 61)
அங்கனூர், செந்துறை, அரியலூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு

முனைவர் தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாழ்வு

தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள்மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.[1]

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.[1]

அரசியல் கொள்கை

தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

படைப்புகள்

சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

  • அத்துமீறு
  • தமிழர்கள் இந்துக்களா?
  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
  • இந்துத்துவத்தினை வேரறுப்போம்
  • அமைப்பாய் திரள்வோம்

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நூல்கள்

  • முள்வலி
  • அமைப்பாய்த் திரள்வோம்
  • கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)

திரைப்படங்கள்

திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.[2] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3
  2. Anbu Thozhi cleared by censors oneindia

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்._திருமாவளவன்&oldid=2702157" இலிருந்து மீள்விக்கப்பட்டது