ஐதராபாத்து நிசாம்களின் நகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரகதங்கள் பதிக்கப்பட்ட அலங்கார கிரீடம்

ஐதராபாத்து நிசாம்களின் நகைகள் (Jewels of the Nizams of Hyderabad) ஐதராபாத் இராச்சியத்தை ஆண்ட நிசாம்களின் நகைகளின் தொகுப்பாகும். இது இன்றைய இந்தியாவில் உள்ள நகைகளின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த சேகரிப்புகளில் ஒன்றாக உள்ளது. [1] இந்திய ஒன்றியத்துடன் தங்கள் இராச்சியத்தை இணைத்த பிறகு, நிசாம் மற்றும் அவரது வாரிசுகள் சேகரிப்பை எடுக்க இந்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. பல வழக்குகளுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தால் நிசாமின் அறக்கட்டளையிலிருந்து 1995 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட $13 மில்லியனுக்கு வைரம் வாங்கப்பட்டது. மேலும் நிசாம்களின் மற்ற நகைகளுடன், மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

நிசாம்களின் அரச சிம்மாசனம், 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆபரணங்களால் பதிக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வைர சுரங்கத்திருந்து கிடைத்த (தற்போது ஆந்திர ராயலசீமா வைர சுரங்க குழுமம்), பர்மிய மாணிக்கங்கள் மற்றும் ஸ்பைனல்கள் மற்றும் பசுரா மற்றும் மன்னார் வளைகுடாவில் இருந்து கிடைக்கும் முத்துக்கள், குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொல்லூர் வைரச் சுரங்கத்தில் இருந்து கொலம்பிய மரகதம், வைரம் உள்ளிட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 2,000 காரட் (0.40 கிலோ) எடையுள்ள வைரங்கள் மற்றும் மரகதங்கள் , 40,000 சோவுக்கும் அதிகமான முத்துக்கள் உட்பட 173 நகைகள் உள்ளன. சேகரிப்பில் இரத்தினக் கற்கள், தலைப்பாகை ஆபரணங்கள், கழுத்தணிகள், பதக்கங்கள், இடுப்புவார்கள், ஆடைப்பட்டயம், தோடுகள், கவசங்கள், வளையல்கள், கொலுசுகள், தெறிகள், கடிகார சங்கிலிகள், மோதிரங்கள், மெட்டிகள் மற்றும் மூக்குத்திகள் ஆகியவை இதில் அடங்கும். அவற்றில் 465 முத்துக்கள் பதிக்கப்பட்ட சட்லடா எனப்படும் ஏழு சரங்கள் கொண்ட பசுரா முத்து நகையும் உள்ளது. 184.75 காரட் எடையுள்ள உலகின் ஐந்தாவது பெரிய வைரமான ஜேக்கப் வைரம், சௌமகல்லா அரண்மனையில் தனது தந்தையின் காலணியின் கால் விரலில் இருந்து கடைசி நிசாம் ஓசுமான் அலி கான் கண்டுபிடித்தார்.

நகைகளின் வரலாறு[தொகு]

ஐதராபாத்து நிசாம்களின் ஒரு அலங்கார கிரீடம்

1967 இல் ஐதராபாத்தின் கடைசி நிசாம் ஓசுமான் அலி கான் இறந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு 1995 ஆம் ஆண்டில் இந்திய அரசு ₹218 கோடிக்கு (சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நகைகளை வாங்கியது. இந்த சேகரிப்புகளை வெறும் 25 மில்லியன் டாலர்களுக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்தது. [2] பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இறுதியாக சுமார் 65 மில்லியன் டாலர் விலையை நிர்ணயித்தது. சோதேபியின் உண்மையான விலையான 350 மில்லியன் டாலர் மதிப்பைக் காட்டிலும் மிகக் குறைவு. [3] பங்குகளின் மிகப்பெரிய பகுதி ($20 மில்லியன்) நிசாமின் முதலாவது பேரன் முகரம் ஜாவுக்கு சென்றது. [3]

தற்போது இந்த சேகரிப்பு மத்திய அரசிடம் உள்ளது . மேலும், மும்பை இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தில் பெட்டகங்களில் வைக்கப்பட்டது. 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் புது தில்லி தேசிய அருங்காட்சியகம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள சலார் ஜங் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் சில முறை காட்சிப்படுத்தப்பட்டது . [4] [5]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. National Museum, New Delhi. "Exhibitions at National Museum of India,New Delhi (India) - Nizams' Jewellery". nationalmuseumindia.gov.in. Archived from the original on 2 April 2009. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  2. "Nizam's Heirs End Wrangle for Treasure" The Independent
  3. 3.0 3.1 "The Prince's Ransom" The Guardian
  4. "King's Ransom: The jewels of the Nizams of Hyderabad, finally on display, include the fifth-largest diamond in the world" India Today
  5. "Hyderabad misses glitter of Nizam’s priceless jewels" The Hindu

வெளி இணைப்புகள்[தொகு]