இராசத்தான் உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தோற்றம், உமெய்ட் பூங்காவினுள், சர்தார் அருங்காட்சியகம், வல்து ஜோத்பூர் கோட்டை

இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 21, 1949 இல் இராஜஸ்தான் உயர் நீதிமன்ற அவசர சட்டம், 1949 ன்படி அமைக்கப்பட்டது. இது இராஜஸ்தான் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இதன் நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆகும்.

இந்நீதிமன்றம் மாகாராஜா சவாய் மான் சிங்கால் 1949 இல் ஜோத்பூரில் துவக்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு அதன் அமர்வுகள் ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டன. பின்னர் 1958 இல் கலைக்கப்பட்ட இந்நீதிமன்றம் மீண்டும் 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பணியாற்ற நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 40.ஆனால் பணியாற்றுவதோ 36 நீதிபதிகள்[சான்று தேவை] மட்டுமே. தற்பொழுதைய தலைமை நீதிபதியின் பெயர் நீதியரசர் நாராயண் ராய்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]