தேவநம்பிய தீசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேவநம்பிய தீசன் | |
|---|---|
| அநுராதபுரத்தின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | கி. மு. 307–கி. மு. 267 |
| இறப்பு | கி. மு. 267 |
| முன்னிருந்தவர் | மூத்தசிவன் |
| பின்வந்தவர் | உத்திய |
| துணைவர் | அனுலா |
| தந்தை | மூத்தசிவன் |
தேவநம்பிய தீசன் அல்லது தீசன் (ஆங்கிலம்: Devanampiya Tissa அல்லது Tissa, சிங்களம்: දේවානම්පිය තිස්ස அல்லது තිස්ස) என்பவர் கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த மன்னன் ஆவார். பௌத்த சமயத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதால் இவருடைய ஆட்சிக் காலம் முக்கியம் பெறுகின்றது. இவருடைய வரலாற்றைப் பற்றி அறிவதற்கு மகாவம்சம் உதவுகின்றது.
ஆட்சி [தொகு]
மூத்தசிவனின் இரண்டாவது மகனே தீசன். தந்தைக்குப் பிறகு தீசன் கி. மு. 267இல் ஆட்சிக்கு வந்தார். இவர் தனது ஆட்சிக் காலத்தில் பேரரசர் அசோகருடன் நட்புக் கொண்டிருந்தார்.