மகாசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாசேனன்
அனுராதபுர மன்னன்
ஆட்சிபொ.பி. 277–304
முன்னிருந்தவர்முதலாம் ஜெத்த திச்சன்
சிறி மேகவண்ண
முழுப்பெயர்
மகாசேன
அரச குலம்விசய வம்சம்
தந்தைகோதபாய

மகாசேனன் (பொ.பி. 277 - 304) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதினெட்டாவது அரசன். முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாவது அரசனான விசயகுமாரன் (பொ.பி. 247–248) ஆட்சியின் போது இருந்த தலைமைஅமைச்சர்களுள் மூன்றாமானவனாக இருந்த கோதாபயன் என்பவனே இவனது தந்தையாவான். மகாசேனனின் மூத்தவனான முதலாம் சேட்டதிச்சன் (பொ.பி. 267–277) லம்பகர்ணர்களுள் பதினேழாமானவன். இந்த சகோதரர்கள் இருவரும் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர்.

சங்கமித்ரர்[தொகு]

சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான முதலாம் சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் மித்ரர் சேட்டனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சைவத்துக்கு எதிரி[தொகு]

இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான்.

மூலநூல்[தொகு]

மகாசேனன்
இலங்கை அரசன்
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
முதலாம் ஜெத்த திச்சன்
அனுராதபுர அரசு
277–304 AD
பின்னர்
சிறிமேகவண்ண
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாசேனன்&oldid=3638526" இலிருந்து மீள்விக்கப்பட்டது