திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்களர்
பெயர்:திருக்களர் பாரிஜாதவனேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்களர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாரிஜாதவனேசுவரர்,களர் முளை நாதர்
தாயார்:அழகேஸ்வரி, இளங்கொம்பன்னாள், அமுதவல்லியம்மை
தல விருட்சம்:பாரிஜாதம்(பவளமல்லி)
தீர்த்தம்:துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், (சிந்தாமணி தீர்த்தம்) ருத்திர தீர்த்தம், ஞானதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.

வழிபட்டோர்[தொகு]

இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

பெயர்க்காரணம்[தொகு]

களர் = சபை, அரங்கம். துர்வாசருக்கு இறைவன் திருநடனக்காட்சி காட்டிய திருத்தலம்.[1]

அருகிலுள்ள ஆண்டவர் கோயில்[தொகு]

கோவிலூர் மடாலயத்தின் வீரகேசர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் அருகிலுள்ளது. இது ஆண்டவர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 263,264

இவற்றையும் பார்க்க[தொகு]