திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தெங்கூர்
பெயர்:திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருத்தங்கூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வெள்ளிமலைநாதர், ரஜதகிரீசுவரர்
தாயார்:பெரியநாயகி, பிரகந் நாயகி
தல விருட்சம்:தென்னை
தீர்த்தம்:சிவகங்கை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றது என்பது தொன்நம்பிக்கை.

வழிபட்டோர்[தொகு]

அகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 269

இவற்றையும் பார்க்க[தொகு]