தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்
தமிழ் இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் மனதில் உடனே தோன்றுபவர் ஒளவையார்தான். இதையடுத்து ஆண்டாள், காக்கைப் பாடினியார், காரைக்கால் அம்மையார் போன்று ஒரு சிலரே தெரிந்தவராக உள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆதி மந்தியார், குற மகள் இளவெயினியார், வெறிபாடிய காமக் கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், குமுழி ஞாழல் நப்பசையார், வெள்ளி வீதியார், பூதப்பாண்டியனின் உள்ளங் கவர்ந்த பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் என்று தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பட்டியல் நீளமானது.
கவிக்குயில் சரோஜினியின் காலத்தில் தமிழில் பெண்கள் யாரும் பெரிய அளவில் கவிதை எழுதியதாகச் செய்திகள் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இரா.மீனாட்சி கவிஞராக உருவெடுத்தார். இரா. மீனாட்சி கவிதை எழுத வந்த காலத்தில் மாலதி ஹரீந்திரன், தேவமகள், ரோகிணி ஆகிய கவிஞர்களும் இருந்தனர். அதன் பின் 1970 ஆம் ஆண்டில் சௌந்தரா கைலாசம் தனது சில கவிதைகளைத் தொகுப்பாக்கிப் பிரசுரித்தார். இதன் பின்பு தமிழ் பெண் எழுத்தாளர்கள் பலர் உருவாகி வருகின்றனர்.
முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்[தொகு]
நாகூரைச் சேர்ந்த சித்தி ஜூனைதா பேகம் என்ற பெண்மணிதான் முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது.
தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பட்டியல்[தொகு]
- லீனா மணிமேகலை
- மாலதி மைத்ரி
- குட்டி ரேவதி
- சுகிர்தராணி
- உமா மகேஸ்வரி
- இளம்பிறை
- சல்மா
- வெண்ணிலா
- தி. பரமேசுவரி
- ரிஷி
- மாலதி (சதாரா)
- வைகைச்செல்வி
- சித்தி ஜுனைதா
- சந்திரவதனா
- சந்திரா இரவீந்திரன்
- நளாயினி தாமரைச்செல்வன்
- இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
- தமிழ்நதி
- தாட்சாயணி
- வேதா இலங்காதிலகம்
- ஜெயந்தி சங்கர்
- ரஜினி பெத்துராஜா
- மதுமிதா
- சாருலதா
- சே. கல்பனா
- எம்.பகீரதி - சமூகவியல், ஊடகவியல் புத்தக எழுத்தாளர். விரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம். [ஆதாரம் தேவை]