ஜெயந்தி சங்கர்
| ஜெயந்தி சங்கர் | |
|---|---|
| பிறப்பு | மதுரை, தமிழ்நாடு, |
| தொழில் | எழுத்தாளர் |
| இலக்கிய வகை | புதினம், வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு |
ஜெயந்தி சங்கர் நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ்நாடு, மதுரையில் பிறந்து பல மாநிலங்களிலும் வளர்ந்து 1990 முதல் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். வீட்டில் இவரது பெயர் சங்கரி. எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. வீணை வாசிப்பார்.
பொருளடக்கம் |
[தொகு] குடும்பப் பின்னணி
தந்தை: நாகசாமி ஐயர் - இந்திய மத்திய அரசாங்கத்தின் முன்னாள் பொறியாளர் (பெற்றோர் - V. ராமசாமி ஐயர் - ஆங்கிலேய ஆட்சியில் பள்ளியில் முன்னாள் ஆங்கில ஆசிரியர்/எக்ஞம்மாள்-இல்லத்தலைவி)
தாய்: கல்யாணி - இல்லத்தலைவி (பெற்றோர் - G.S. கிருஷ்ணய்யர் - மதுரையில் ஜோதி கிருஷ்ணா லஞ்ச் ஹோம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் மூன்று பெரிய உணவகங்கள்வரை நடத்தியவர்/லக்ஷ்மி-இல்லத்தலைவி)
உடன்பிறந்தோர்: உஷா - லண்டன் நகரில் ஆங்கில ஆசிரியை (தங்கை), ராமகிருஷ்ணன் - ஹைதரபாத் நகரில் பொறியாளர் (தம்பி) மற்றும் ஸ்ரீநிவாசன் - ஸ்காட்லந்தில் பொறியாளர் (தம்பி)
கணவர்: சங்கர் - சிங்கப்பூரில் பொறியாளர்
மகன்கள்: கிருஷ்ணா (பொறியாளர்) மற்றும் ராகவ்
[தொகு] கல்வி
ஒரிசா, மதுரை, கோயம்புத்தூர், ஷில்லாங், சென்னை போன்ற பல ஊர்களில் 13 பள்ளிகளில் +2 வரை படித்துவிட்டு திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் இயற்பியல் பட்டம்.
[தொகு] எழுத்துலக வாழ்வு
1995 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவர் ஓர் எழுத்தாளராக உருவாக முக்கிய காரணம் தொடர்ந்த வாசிப்பும், சிங்கப்பூரின் நூலகக் கிளைகளுமே. பாரதிய வித்யா பவனின் நவ்னீத் ஹிந்தி டைஜஸ்ட்டில் ஜனவரி 2008 இதழில் இவரின் 'திரிசங்கு' சிறுகதை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2008 ஏப்ரல் 30 அன்று நடந்தேறிய நிகழ்வில் உரையாற்றிய மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்கள் இவர் எழுதிய 'ஈரம்' சிறுகதைச் சிலாகித்துப் பேசிவிட்டு, 'இருபத்தைந்தாண்டுகளில் எழுதப்படாத ஆகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை' என்று பாராட்டினார். 'வானவில் கூட்டம்' போன்ற உலகத் தமிழ்ச் சிறுகதைகள் அடங்கிய சில தொகுப்புகளில் இவரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை 'புதிய அவதாரம்' இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிஸம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது. இவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் நூலாக்கம் பெறவுள்ளன.
சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் அக்டோபர் 31st 2009ல் ‘Under Covers’ என்ற கருப்பொருளில் கொண்டாடிய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் ’ஒரே போன்ற இருவேறு ’வடு’க்கள்’ (‘Scars so similar and yet so different’) என்ற தலைப்பிலும் 4-01-09 ல் இலக்கிய வட்டத்தில் ‘நவீன தமிழ்ப் புனைவுகளின் பேசுபொருள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றியுள்ளார். அத்துடன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் 9th-10th அக்டோபர் 2010ல் சிறுகதைக் கருத்தரங்கில் பங்குபெற அழைக்கப்பட்டார். ‘அயலில் தமிழிலக்கியம்’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை நல்ல வரவேற்பைப்பெற்றது.
[தொகு] அச்சிதழ்கள்
(சிங்கப்பூரின்) தமிழ் முரசு, சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர், அமுதசுரபி, அமீர தமிழ்ச் சங்கம் ஆண்டு மலர், Fetna 2004 நியூஜெர்ஸி ஆண்டிதழ், அவள் விகடன், ஆனந்தவிகடன் தீபாவளி மலர், கல்கி, கல்கி தீபாவளி மலர், உயிர்மை, வார்த்தை, உயிர் எழுத்து, கலைமகள், பெண்ணே நீ, அம்ருதா, வடக்குவாசல், வல்லினம், நாம், அநங்கம், மௌனம், கனவு, இலக்கியபீடம், நவ்னீத் ஹிந்தி டைஜெஸ்ட், இனிய நந்தவனம், புதிய பார்வை, தென்றல், தென்றல் முல்லை, த தமிழ் டைம்ஸ், (பாரிஸ்) பெண்கள் சந்திப்புமலர், 'தமிழ்க்கொடி 2006' என்ற ஆழி பதிப்பகத்தின் ஆண்டு மலர் போன்ற பல்வேறு இதழ்களிலும் நூல்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
[தொகு] இணைய இதழ்கள்
திண்ணை, திசைகள் தவிர சாமாசார், இ-சங்கமம், தமிழோவியம், தட்ஸ் தமிழ், பதிவுகள், நிலாச்சாரல், உயிரோசை போன்ற மின்னிதழ்களில் இவரது படைப்புகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன.
[தொகு] பரிசுகளும் விருதுகளும்
- 1990களின் இறுதி - 'தெளிவு', 'கீரை' போன்ற சிறுகதைகள் ஆறுதல் பரிசுகள் பெற்று சிங்கை வானொலியில் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன.
- 1998 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
- 2000 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசு.
- 2001 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை 'நொண்டி' (நுடம்) இரண்டாம் பரிசு.
- 2001 - சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற முதல் (தங்கப்) பரிசு
- 2004 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் - 'முத்தமிழ் விழா' மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் 'பொம்மை' சிறுகதை இரண்டாம் பரிசு
- 2005 - அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் 'சேவை' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 2005 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா ) 'மழலைச்சொல் கேளாதவர்' என்ற சிறுகதை ஊக்கப்பரிசு.
- 2005 - தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது கௌரவக் குறிப்பு - ‘வேண்டியது வேறில்லை' (குறுநாவல்) - நான்காமிடம்
- 2005 - பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 'கடைசிக் கடிதம்’ என்ற சிறுகதை முதல் தகுதி - அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம்.
- 2006 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் 'சொல்லாத சொல்' என்ற சிறுகதை முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற ஒன்பதாவது தொகுதியில் பிரசுரம்.
- 2006 - சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.
- 2007 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பத்தாவது தொகுதியான 'சுடும் நிலவு'ல் 'வீடு' சிறுகதை தேர்வு/பிரசுரம்
- 2007 - 2006ஆம் வருடம் பிரசுரமான 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006'ல் - சிறப்புப் பரிசு பெற்றது.
- 2008 சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது.
- 2009 கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை 'புதிய அவதாரம்' இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிஸம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது.
- 2009 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' நூலுக்கு நல்லி - திசையெட்டும் இலக்கிய விருது 2009'
- 2009 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி 2008 விருது அளிக்கப்பட்டது.
- 2010 'திரைகடலோடி' சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2010 க்குத் தேர்வு
[தொகு] நூல்கள்
[தொகு] சிறுகதைத் தொகுதிகள்
- நாலேகால் டாலர் - 2005 - மதி நிலையம்
- பின் சீட் - 2006 - மதி நிலையம்
- நியாயங்கள் பொதுவானவை - 2006 - மணிமேகலை பிரசுரம்
- மனுஷி - 2007 - மதி நிலையம்
- திரைகடலோடி - 2008 - மதி நிலையம்
- தூரத்தே தெரியும் வான்விளிம்பு - 2010 - சந்தியா பதிப்பகம்
[தொகு] குறுநாவல்
- முடிவிலும் ஒன்று தொடரலாம் - 2005 - சந்தியா பதிப்பகம்
[தொகு] புதினம்
- வாழ்ந்து பார்க்கலாம் வா - 2006 - சந்தியா பதிப்பகம்
- நெய்தல் - 2007 - சந்தியா பதிப்பகம்
- மனப்பிரிகை - 2008 - சந்தியா பதிப்பகம்
- குவியம் - 2009 - சந்தியா பதிப்பகம்
[தொகு] கட்டுரைத் தொகுதிகள்
- ஏழாம் சுவை - 2005 - உயிர்மை பதிப்பகம்
- பெருஞ்சுவருக்குப் பின்னே - சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் - 2006 - உயிர்மை பதிப்பகம்
- சிங்கப்பூர் வாங்க - விகடன் பிரசுரம் - 2006
- ச்சிங் மிங் - 2009 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
- கனவிலே ஒரு சிங்கம் - 2010 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
[தொகு] மொழிபெயர்ப்புகள்
- மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள் (ஆங்கிலத்தினூடாக) - 2007 - உயிர்மை பதிப்பகம்
- சூரியனுக்கு சுப்ரபாதம் - சுயமுன்னேற்றக் கட்டுரைகள் - 2007 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
- மீன் குளம் - சிறார் சீனக்கதைகள் (ஆங்கிலத்தினூடாக) 2008 - விவேக் எண்டர்பிரைஸ் (மதி நிலையம்)
- என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - சீனத்துச் சிறுகதைகள் - (ஆங்கிலத்தினூடாக)- 2011 - காலச்சுவடு
[தொகு] வாழ்க்கை வரலாறு
- இசையும் வாழ்க்கையும் - (காற்றினிலே வரும் கீதம் - எம். எஸ். சுப்புலட்சுமி + சங்கீத பிதாமகர் - செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் + நாத யோகி - மதுரை மணி ஐயர் + நாதப்பிரமம் - அரியக்குடி ராமானுஜ ஐங்கார்) - 2007 - சந்தியா பதிப்பகம்
Anthologies
1) வானவில் கூட்டம் 2) புதிய காளி 3) கனலும் எரிமலையும் 4) சுடும் நிலவு 5) பிரியத்தின் சிறகுகள் 6) வேறொரு மனவெளி 7) முகங்கள் 8) இரவு
[தொகு] வெளி இணைப்புகள்
- ஜெயந்தி சங்கரின் வலைத்தளம்
- எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஒரு இ-நேர்காணல்
- பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு, ஒரு பார்வை, சாந்தன்
- அரும்பு
- எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்
- தென்றல்
- தேடுவது கிடைக்கும் வரை தேடலும் தொடரும்
- தமிழோவியம்
- பெருஞ்சுவருக்குப் பின்னே - நூல் அறிமுகம்
- மௌனத்தின் அலறல்
- சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்
- Experiments with various genres of writings