வேதா இலங்காதிலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதா இலங்காதிலகம்

வேதா இலங்காதிலகம் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர். கோப்பாய் எனும் ஊரில் பிறந்த வேதா, இலங்கையின் களுத்துறை மாவட்டத் தேயிலை, ரப்பர் தோட்ட நிர்வாகியான இலங்காதிலகம் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். புலம்பெயெர்ந்து 1986-ல் டென்மார்க் நாட்டிற்குச் சென்ற கணவரைத் தொடர்ந்து 1987-ல் இவரும் தன் மகன், மகள் ஆகியோருடன் டென்மார்க் சென்றார். அங்கு டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தந்தை நகுலேசுவரர் ஊக்குவிப்பால் 1976-ல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் துவங்கிய இவர் சிறு சஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.

வெளியான நூல்கள்[தொகு]

  • வேதாவின் கவிதைகள் - கவிதைகள் (2003)
  • குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004)
  • உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) (இந்நூல் இவர் கணவருடன் இணைந்து செய்யப்பட்ட நூல்)
  • பெற்றோரியலில் சிற்றலைகள் - (2018) - சிறுகட்டுரைகள் பிள்ளை வளர்ப்பு, இளையோர் பற்றியதும் + வேதாவின் ஆத்திசூடி +பெற்றோர் மாட்சி பற்றிய மொழிகளடங்கிய நூல்
  • குறள் தாழிசை - (2018) (திவான்பகதூர் பாவாந்தபிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின்படிஇரண்டிரண்டாய் ஈற்றடி குறைந்த இஃது) கவிதை மொழியில் 23 அங்கங்கள்  குறள் + வேதாவின் மொழிகள்  + 25 சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதா_இலங்காதிலகம்&oldid=3229374" இலிருந்து மீள்விக்கப்பட்டது