செம்பருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செம்பருத்தி
Hibiscus rosa-sinensis 'Brilliant'
Hibiscus rosa-sinensis 'Brilliant'
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Malvales
குடும்பம்: மல்வேசியே
பேரினம்: கிபிஸ்பஸ்
இனம்: H. rosa-sinensis
இருசொற்பெயர்
Hibiscus rosa-sinensis
L.

செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது

பொருளடக்கம்

பதியமுறை இனப் பெருக்கம் [தொகு]

இச்‌செடி விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்வதில்லை. தண்டுத் துண்டம் மூலம் பதியமுறையில் எளிதாக இனம் பெருக்கலாம்.

பயன்கள் [தொகு]

  • இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.
  • இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
  • சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.
  • இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.
  • காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.
  • ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

மருத்துவக் குணங்கள் [தொகு]

செவ்வரத்தையின் மனதுக்கு சுகமளிக்கும் அழகுத் தோற்றம்
  • செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
  • வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)
  • கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)
  • மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)
  • வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)

பூக்கள் [தொகு]

பூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன.இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும்.

எ.கா:

விற்பனை [தொகு]

இச் செடி இரசியா போன்ற குளிர் நாடுகளில் காலநிலைமாற்றங்களை தாண்டி வளரக்கூடியது. எனவே இது வீடுகளில் அலங்காரச்செடியாக வளர்க்கப்படுகின்றது. இரு மீற்றர் (மீட்டர்) வளர்ந்த செடி அங்கு 250$-க்கு விற்கப்படுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செம்பருத்தி&oldid=1356525" இருந்து மீள்விக்கப்பட்டது