இயற்கை உரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கை உரம் (Manure) என்பது வேளாண்மையில் மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும்.
பொருளடக்கம் |
தொழு உரம் [தொகு]
தொழு உரம் என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருள்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும்.
ஊட்டப்பொருள்கள் [தொகு]
உயிர்சார் பொருள்கள் மற்றும் பாக்டீரியாக்களால் கவரப்படும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருள்கள் ஆகியவற்றை நிலத்தில் ஏற்றுவதன் மூலம் இயற்கை உரங்கள் மண் வளத்தைக் கூட்டுகின்றன.
உயிர்ச்சங்கிலி [தொகு]
மேலும், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உண்டு வாழும் உயர் உயிரினங்களினால் ஓர் உயிர்ச்சங்கிலி ஏற்பட்டு மண் உணவு வலை (soil food web) உருவாக ஏதுவாகிறது.