திபெத் தன்னாட்சிப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதி

திபெத் தன்னாட்சி பகுதி (Tibet Autonomous Region) அல்லது சுருக்கமாக திபெத் (சீனம்: 西藏自治区) என்பது சீன மக்கள் குடியரசால் 1958-ல் திபெத்திய ஆன்மிகம் மற்றும் அரசியல் தலைவரான 14வது தலாய் லாமாவை விரட்டிவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் நாடாகும். 1965-ல் திபெத் ஒரு மாகாண அளவிலான தன்னாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது சிசங் தன்னாட்சி பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.[1] திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரம் லாசா ஆகும். திபெத் தன்னாட்சிப் பகுதி 6 மாவட்டங்களாகவும், 68 கவுண்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. [2][3]

சீன மக்கள் குடியரசின் கட்டமைப்புள் திபெத், திபெத் தன்னாட்சி பகுதியின் அங்கமாகவே அங்கீகரிக்கப்படுகிறது. திபெத் தன்னாட்சிப் பகுதியுள் திபெத்திய பகுதிகளைத் தவிர யு-சாங் மற்றும் காம் மாகாணப் பகுதிகளும் அடங்கும். இத்தானாட்சிப் பகுதியே சீனாவின் மாகாணங்களுள் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது (1,200,000 சதுர கிலோமீட்டர்).

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tibet (Xi'zang)
  2. Tibet AUTONOMOUS REGION, CHINA
  3. Tibet profile

வெளி இணைப்புகள்[தொகு]