மத்தேயு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஅழிப்பு: ml:മത്തായി എഴുതിയ സുവിശേഷം |
சி சேர்க்கை |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Apostle Matthew on St.Isaac cathedral (SPb).jpg|thumbnail|250px|<center>புனித மத்தேயு,<br />புனித ஈசாக்கு தேவாலயம் பீட்டர்ஸ்பர்க்,[[இரசியா]]</br></center>]] |
[[படிமம்:Apostle Matthew on St.Isaac cathedral (SPb).jpg|thumbnail|250px|<center>புனித மத்தேயு,<br />புனித ஈசாக்கு தேவாலயம் பீட்டர்ஸ்பர்க்,[[இரசியா]]</br></center>]] |
||
{{புதிய ஏற்பாடு நூல்கள்}} |
{{புதிய ஏற்பாடு நூல்கள்}} |
||
'''மத்தேயு நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் முதலாவது நூலாகும். இது [[இயேசு]]வின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய |
'''மத்தேயு நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் முதலாவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_Matthew மத்தேயு]</ref>. இது [[இயேசு]]வின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள முதல் நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''மத்தேயு எழுதிய நற்செய்தி''', κατὰ Ματθαῖον εὐαγγέλιον (= The Gospel according to Matthew) என்பதாகும். |
||
== அமைப்பு == |
|||
மற்ற நற்செய்தி நூல்களான [[மாற்கு நற்செய்தி|மாற்கு]],[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து [[ஒத்தமை நற்செய்தி நூல்கள்]] (Synoptic Gospels)<ref>[http://en.wikipedia.org/wiki/Synoptic_Gospels ஒத்தமை நற்செய்திகள்] </ref> என்று அழைக்கப்படுவதும் உண்டு. |
|||
இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது. இந்நூலை பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கிறது. |
|||
# இயேசுவின் மூதாதையர் பட்டியல், பிறப்பு, குழந்தைப் பருவம் (அதிகாரம் 1-2) |
|||
# திருமுழுக்கு யோவான் விண்ணரசை அறிவித்தலும் இயேசு திருமுழுக்கு பெறலும் (அதிகாரம் 3; 4:11) |
|||
# கலிலேயாவில் இயேசுவின் பகிரங்க வாழ்க்கை (4:12–26:1) |
|||
## இயேசு வழங்கிய மலைப்பொழிவு (அதிகாரம் 5-7) |
|||
## மறைபரப்புப் பணிக்கு இயேசு தம் திருத்தூதர்களை அனுப்புகிறார் (10-11:1) |
|||
## இயேசு கூறிய உவமைகள் (அதிகாரம் 13) |
|||
## இயேசுவைப் பின்பற்றுவதற்கு வழி(அதி 18-23) |
|||
## இரண்டாம் வருகை பற்றி முன்னறிவித்தல் (அதிகாரம் 24-26:5) |
|||
# இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழலும்; மறை பரப்பு பணிப்பு (26:6-28:16–20) |
|||
==நூலின் ஆசிரியர்== |
|||
இந்நூலின் முதன்மை நோக்கம் நாசரேத்தூர் [[இயேசு]]வே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வலியுறுத்துவது ஆகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட இறைவாக்குகளை [[தீர்க்கதரிசனங்களை]] நிறைவு செய்ய வந்தார் என்பதை முன்னிறுத்துகிறது. இதற்காக குறைந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது. இந்நூலின் அடிப்படை நோக்கத்தை பின்வரும் வசனம் நன்கு விளக்குகிறது. |
|||
(இயேசு:)"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்." (மத்தேயு 5:17) |
|||
இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது பற்றித் தெளிவில்லை. வேறு ஒருவர் எழுதி புனித [[மத்தேயு]]வின் பெயரில் வெளியிட்டிருக்கலாம்; அல்லது மத்தேயு பெயரால் செயல்பட்ட தொடக்க காலத் திருச்சபைக் குழுவால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும். |
|||
== சில தகவல்கள் == |
|||
புனித மத்தேயு எபிரேய (அரமேய) மொழியில் ஒரு நற்செய்தி எழுதியதாகவும் அது அழிந்து போனதாகவும் கருதப்படுகிறது. பிறகு அந்நூலின் கிரேக்க மொழிபெயர்ப்பு அல்லது மூல நூலுடன் பழக்கப்பட்ட ஒருவர் தொகுத்த விடயங்கள் புனித மத்தேயுவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது எழுதப்பட்ட காலம் குறித்த ஒருமித்த கருத்து கிடயாது. பொதுவாக [[கி.பி.]] 50-100 இடையிலான காலப்பகுதி எனக் கருதப்படுகிறது. |
|||
== உசாத்துணை == |
|||
[[இயேசு கிறித்து]] நிறுவிய [[இறையாட்சி]] பற்றிய நற்செய்தியைத் [[திருத்தூதர்]] மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு [[திருத்தூதர்]] தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதைவிட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு. |
|||
==நூல் எழுதப்பட்ட சூழல்== |
|||
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் (கி.பி. 70), யூதச்சங்கங்கள் கிறித்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்க காலத் திருச்சபைக்குள்ளும் அறம், மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம். |
|||
இந்நூல் யூத மக்கள் பலர் வாழ்ந்த ஒரு பகுதியில், ஒருவேளை மத்திய தரைக் கடல் கிழக்குப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகர், அல்லது தமஸ்கு நகர், அல்லது பாலசுத்தீனக் கடல் நகராகிய செசாரியாவில் மத்தேயு எழுதப்பட்டிருக்கலாம். |
|||
மத்தேயு நற்செய்தியில் கி.பி. 70இல் உரோமைப் படையினர் எருசலேமை அழித்துத் தரைமட்டமாக்கிய செய்தி மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதால் (காண்க: மத் 21:41; 22:7; 27:25) அந்நூல் கி.பி. 85 அல்லது 90ஆம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞரின் கணிப்பு. |
|||
==மத்தேயு நற்செய்திக்கு ஆதாரங்கள்== |
|||
மத்தேயு நற்செய்தி, [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு நற்செய்தியின்]] அடிப்படையில் அமைந்தது என மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். மாற்கு நற்செய்தியை ஆங்காங்கே திருத்தியும் விரித்தும் எழுதப்பட்ட மத்தேயு நற்செய்திக்கு, வேறு இரண்டு மூல ஆதாரங்கள் பயன்பட்டன எனத் தெரிகிறது. ஒன்று "Q" என அழைக்கப்படும் ஆதார ஏடு. "Q" என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்பது பொருள். மற்றொரு மூலம் மத்தேயுவுக்கே தனிப்பட்ட முறையில் ஆதாரமாக இருந்த ஏடு எனவும் அதற்கு "M" எனப் பெயர் வழங்குவது எனவும் அறிஞர் முடிவுசெய்துள்ளனர். |
|||
==நூலின் உள்ளடக்கம்== |
|||
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறித்தவர்களும் பிற இனத்துக் கிறித்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறித்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த [[மெசியா]] இயேசுதாம் என யூதக் கிறித்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்து சுட்டிக்காட்டப்படுகிறது. |
|||
எருசலேமின் அழிவுக்குப் பின் (கி.பி. 70), யூதர்கள் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர். இசுரயேல் நாடு உரோமையரின் ஆதிக்கத்துக்குக் கீழ் வந்த நிலையில், எருசலேம் திருக்கோவில் அழிந்துபட்ட நிலையில், யூத சமயம் எவ்வாறு தொடர்ந்து நீடிக்க முடியும்? மத்தேயுவும் இதே கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் தந்த பதில்? இயேசுவை யார்யார் ஆண்டவர் என அறிக்கையிட்டு, அவரது போதனைகளைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே உண்மையான யூத நெறியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர்கள் ஆவர். |
|||
யூதக் கிறித்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறித்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. [[இயேசு கிறித்து]] திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது. |
|||
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறித்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறைகூவல் விடுக்கிறார் (மத் 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. |
|||
இந்நூலின் கிறிஸ்தியல், திருச்சபையியல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன. |
|||
==மத்தேயு நற்செய்தி நூலின் உள்ளீட்டு அமைப்பு== |
|||
[[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு நற்செய்தியிலிருந்து]] மத்தேயு எடுத்துக்கொண்டவை இவை: |
|||
*இயேசு கலிலேயாவில் பணியைத் தொடங்கியது பற்றிய கூற்றுத்தொடர்; |
|||
*இயேசு எருசலேமை நோக்கிப் பயணம் மேற்கொண்ட நிகழ்வு; |
|||
*இயேசு எருசலேமில் போதித்து, பின்னர் அங்கே துன்பங்கள் அனுபவித்தது பற்றிய கூற்றுத்தொடர். |
|||
இவற்றை உள்ளடக்கிய அடிப்படைக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு, மத்தேயு தாம் தொகுத்த நற்செய்தியில் ஒரு பாயிரம் போன்ற பகுதியை இணைத்தார் (மத்தேயு முதல் இரு அதிகாரங்கள்). அப்பகுதி இயேசுவின் பிறப்புப் பற்றியும் குழந்தைப் பருவம் பற்றியும் பேசுகிறது. இயேசு இன்னார் என அடையாளம் காட்டுவதே இதன் நோக்கம். இயேசு ஆபிரகாமின் மகன், தாவீதின் மகன், கடவுளின் மகன் என இனம் காட்டுவதும், இசுரயேலின் மெசியாவாகிய இயேசு, எவ்வாறு தாவீதின் நகராகிய பெத்லகேமிலிருந்து நாசரேத்துக்குச் சென்றார் என்று விவரிப்பதும் இப்பகுதியே. |
|||
மத்தேயு நற்செய்தியில் முதன்மை வாய்ந்த கட்டமைப்பு அதில் காணப்படும் '''ஐந்து பேருரைகள்''' (பொழிவுகள்) ஆகும். அவையாவன: |
|||
*மலைப்பொழிவு (மத்தேயு அதி. 5-7) |
|||
*திருத்தூதுப் பொழிவு (மத்தேயு அதி. 10) |
|||
*உவமைப் பொழிவு (மத்தேயு அதி. 13) |
|||
*திருச்சபைப் பொழிவு (மத்தேயு அதி. 18) |
|||
*நிறைவுகாலப் பொழிவு (மத்தேயு அதி. 24-25) |
|||
மேற்கூறிய ஐந்து பொழிவுகளையும் அளித்து, தம் மூல ஆதாரங்களைப் பயன்படுத்தி, ''இயேசு ஒருவரே நம் ஆசிரியர்'' (மத் 23:10) என மத்தேயு நிலைநாட்டுகிறார். இயேசுவின் போதனைப் பகுதியில் மாற்குவை விட அதிகக் கருத்துகளும் தருகிறார். |
|||
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] திருச்சட்ட நூலாகிய [[தோரா|தோராவில்]]<ref>[http://en.wikipedia.org/wiki/Torah தோரா]</ref> ஐந்து நூல்கள் அமைந்திருப்பதுபோல் மத்தேயு நற்செய்தி நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன. |
|||
மத்தேயுவில் காணப்படுகின்ற ஐந்து பொழுவுகள் ஒவ்வொன்றின் முன்னும் பின்னும் பல ''நிகழ்ச்சித் தொகுப்புகள்'' தரப்படுகின்றன. இவ்வாறு, இயேசுவின் பொதுப்பணிக்கான தயாரிப்பு அதிகாரங்கள் 3-4 பகுதியில் விளக்கப்படுகிறது. மலைப் பொழிவுக்குப் பின்னர், திருத்தூதுப் பொழிவுக்கு முன்னால், இயேசு புரிந்த புதுமைகள் தரப்படுகின்றன (அதி. 8-9). உவமைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் போதனையைச் சிலர் ஏற்கின்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை என்பது விளக்கப்படுகிறது (அத். 11-12). திருச்சபைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் கலிலேயப் பணியும் இயேசு எருசலேமை நோக்கிப் பயணமாதலும் பேசப்படுகின்றன (அதி. 19-23). |
|||
இறுதியாக, அதிகாரங்கள் 26-28இல்.இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் விளக்கம் பெறுகின்றன. மாற்கு நற்செய்தி, இயேசுவின் கல்லறை வெறுமையாக இருந்தது என்ற செய்தியோடு முடிந்தது. ஆனால், மத்தேயு நற்செய்தியில், உயிர்த்தெழுந்த இயேசு கலிலேயாவில் தோன்றிய செய்தி சேர்க்கப்பட்டுள்ளது. அப்போது இயேசு தம் சீடர்களிடம் தம் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்குமாறு பணிக்கின்றார் (மத் 28:16-20). |
|||
மத்தேயு நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பட்டியலிட்டுக் காட்டலாம். |
|||
== மத்தேயு நற்செய்தி == |
|||
<div style="text-align:center"> |
|||
<big>'''நூலின் பிரிவுகள்'''</big> |
|||
</div> |
|||
{| class="wikitable" |
|||
|- |
|||
! பொருளடக்கம் - பகுதிப் பிரிவு |
|||
! அதிகாரம் - வசனம் பிரிவு |
|||
! 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
|||
|- |
|||
| '''முன்னுரை: இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்''' |
|||
|அதிகாரங்கள் 1 முதல் 2 முடிய |
|||
| 5 - 7 |
|||
|- |
|||
| '''பகுதி 1: விண்ணரசு பறைசாற்றப்படல்''' |
|||
1. நிகழ்ச்சி |
|||
<br>2. அறிவுரை '''(மலைப்பொழிவு)''' |
|||
| அதிகாரங்கள் 3 முதல் 7 முடிய |
|||
அதிகாரங்கள் 3 முதல் 4 முடிய |
|||
<br>அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய |
|||
| 7 - 16 |
|||
7 - 9 |
|||
<br>10 - 16 |
|||
|- |
|||
| '''பகுதி 2: விண்ணரசுப் பணி''' |
|||
1. நிகழ்ச்சி |
|||
<br>2. அறிவுரை '''(திருத்தூதுப் பொழிவு)''' |
|||
| அதிகாரங்கள் 8 முதல் 10 முடிய |
|||
அதிகாரங்கள் 6 முதல் 9 முடிய |
|||
<br>அதிகாரம் 10 |
|||
| 16 - 22 |
|||
16 - 20 |
|||
<br>20 - 22 |
|||
|- |
|||
| '''பகுதி 3: விண்ணரசின் தன்மை''' |
|||
1. நிகழ்ச்சி |
|||
<br>2. அறிவுரை '''(உவமைப் பொழிவு)''' |
|||
| அதிகாரங்கள் 11 முதல் 13:52 முடிய |
|||
அதிகாரங்கள் 11 முதல் 12 முடிய |
|||
<br>அதிகாரம் 13:1 முதல் 13:52 முடிய |
|||
| 22 - 29 |
|||
22 - 26 |
|||
<br>26 - 29 |
|||
|- |
|||
| '''பகுதி 4: விண்ணரசின் அமைப்பு''' |
|||
1. நிகழ்ச்சி |
|||
<br>2. அறிவுரை '''(திருச்சபைப் பொழிவு)''' |
|||
| அதிகாரங்கள் 13:53 முதல் 18 முடிய |
|||
அதிகாரங்கள் 13:53 முதல் 17 முடிய |
|||
<br>அதிகாரம் 18 |
|||
| 29 - 38 |
|||
29 - 36 |
|||
<br>36 - 38 |
|||
|- |
|||
| '''பகுதி 5: விண்ணரசின் வருகை''' |
|||
1. நிகழ்ச்சி |
|||
<br>2. அறிவுரை '''(நிறைவுகாலப் பொழிவு)''' |
|||
| அதிகாரங்கள் 19 முதல் 25 முடிய |
|||
அதிகாரங்கள் 19 முதல் 23 முடிய |
|||
<br>அதிகாரங்கள் 24 முதல் 25 முடிய |
|||
| 38 - 53 |
|||
38 - 48 |
|||
<br>48 - 53 |
|||
|- |
|||
| '''முடிவுரை: இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும்''' |
|||
|அதிகாரங்கள் 26 முதல் 28 முடிய |
|||
| 53 - 61 |
|||
|} |
|||
== ஆதாரங்கள் == |
|||
<references/> |
|||
* [http://www.newadvent.org/cathen/10057a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம்] |
* [http://www.newadvent.org/cathen/10057a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம்] |
||
* விவிலியம் KJV |
* விவிலியம் KJV |
||
* [http://en.wikipedia.org/wiki/Gospel_of_Matthew ஆங்கில விக்கிபீடியா] |
* [http://en.wikipedia.org/wiki/Gospel_of_Matthew ஆங்கில விக்கிபீடியா] |
||
[[பகுப்பு:விவிலியம்]] |
|||
[[பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்]] |
[[பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்]] |
||
[[பகுப்பு:கிறித்தவம்]] |
|||
[[பகுப்பு:விவிலியம்]] |
|||
[[பகுப்பு:கிறித்தவ சமய நூல்கள்]] |
|||
[[பகுப்பு:சமயங்கள்]] |
|||
[[ang:Godspell Mattheus]] |
[[ang:Godspell Mattheus]] |
18:33, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலாவது நூலாகும்[1]. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள முதல் நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் மத்தேயு எழுதிய நற்செய்தி, κατὰ Ματθαῖον εὐαγγέλιον (= The Gospel according to Matthew) என்பதாகும்.
மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு,லூக்கா என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels)[2] என்று அழைக்கப்படுவதும் உண்டு.
நூலின் ஆசிரியர்
இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது பற்றித் தெளிவில்லை. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம்; அல்லது மத்தேயு பெயரால் செயல்பட்ட தொடக்க காலத் திருச்சபைக் குழுவால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும்.
இயேசு கிறித்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதைவிட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.
நூல் எழுதப்பட்ட சூழல்
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் (கி.பி. 70), யூதச்சங்கங்கள் கிறித்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்க காலத் திருச்சபைக்குள்ளும் அறம், மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.
இந்நூல் யூத மக்கள் பலர் வாழ்ந்த ஒரு பகுதியில், ஒருவேளை மத்திய தரைக் கடல் கிழக்குப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகர், அல்லது தமஸ்கு நகர், அல்லது பாலசுத்தீனக் கடல் நகராகிய செசாரியாவில் மத்தேயு எழுதப்பட்டிருக்கலாம்.
மத்தேயு நற்செய்தியில் கி.பி. 70இல் உரோமைப் படையினர் எருசலேமை அழித்துத் தரைமட்டமாக்கிய செய்தி மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதால் (காண்க: மத் 21:41; 22:7; 27:25) அந்நூல் கி.பி. 85 அல்லது 90ஆம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞரின் கணிப்பு.
மத்தேயு நற்செய்திக்கு ஆதாரங்கள்
மத்தேயு நற்செய்தி, மாற்கு நற்செய்தியின் அடிப்படையில் அமைந்தது என மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். மாற்கு நற்செய்தியை ஆங்காங்கே திருத்தியும் விரித்தும் எழுதப்பட்ட மத்தேயு நற்செய்திக்கு, வேறு இரண்டு மூல ஆதாரங்கள் பயன்பட்டன எனத் தெரிகிறது. ஒன்று "Q" என அழைக்கப்படும் ஆதார ஏடு. "Q" என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்பது பொருள். மற்றொரு மூலம் மத்தேயுவுக்கே தனிப்பட்ட முறையில் ஆதாரமாக இருந்த ஏடு எனவும் அதற்கு "M" எனப் பெயர் வழங்குவது எனவும் அறிஞர் முடிவுசெய்துள்ளனர்.
நூலின் உள்ளடக்கம்
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறித்தவர்களும் பிற இனத்துக் கிறித்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறித்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறித்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்து சுட்டிக்காட்டப்படுகிறது.
எருசலேமின் அழிவுக்குப் பின் (கி.பி. 70), யூதர்கள் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர். இசுரயேல் நாடு உரோமையரின் ஆதிக்கத்துக்குக் கீழ் வந்த நிலையில், எருசலேம் திருக்கோவில் அழிந்துபட்ட நிலையில், யூத சமயம் எவ்வாறு தொடர்ந்து நீடிக்க முடியும்? மத்தேயுவும் இதே கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் தந்த பதில்? இயேசுவை யார்யார் ஆண்டவர் என அறிக்கையிட்டு, அவரது போதனைகளைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே உண்மையான யூத நெறியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர்கள் ஆவர்.
யூதக் கிறித்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறித்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இயேசு கிறித்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறித்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறைகூவல் விடுக்கிறார் (மத் 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
இந்நூலின் கிறிஸ்தியல், திருச்சபையியல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.
மத்தேயு நற்செய்தி நூலின் உள்ளீட்டு அமைப்பு
மாற்கு நற்செய்தியிலிருந்து மத்தேயு எடுத்துக்கொண்டவை இவை:
- இயேசு கலிலேயாவில் பணியைத் தொடங்கியது பற்றிய கூற்றுத்தொடர்;
- இயேசு எருசலேமை நோக்கிப் பயணம் மேற்கொண்ட நிகழ்வு;
- இயேசு எருசலேமில் போதித்து, பின்னர் அங்கே துன்பங்கள் அனுபவித்தது பற்றிய கூற்றுத்தொடர்.
இவற்றை உள்ளடக்கிய அடிப்படைக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு, மத்தேயு தாம் தொகுத்த நற்செய்தியில் ஒரு பாயிரம் போன்ற பகுதியை இணைத்தார் (மத்தேயு முதல் இரு அதிகாரங்கள்). அப்பகுதி இயேசுவின் பிறப்புப் பற்றியும் குழந்தைப் பருவம் பற்றியும் பேசுகிறது. இயேசு இன்னார் என அடையாளம் காட்டுவதே இதன் நோக்கம். இயேசு ஆபிரகாமின் மகன், தாவீதின் மகன், கடவுளின் மகன் என இனம் காட்டுவதும், இசுரயேலின் மெசியாவாகிய இயேசு, எவ்வாறு தாவீதின் நகராகிய பெத்லகேமிலிருந்து நாசரேத்துக்குச் சென்றார் என்று விவரிப்பதும் இப்பகுதியே.
மத்தேயு நற்செய்தியில் முதன்மை வாய்ந்த கட்டமைப்பு அதில் காணப்படும் ஐந்து பேருரைகள் (பொழிவுகள்) ஆகும். அவையாவன:
- மலைப்பொழிவு (மத்தேயு அதி. 5-7)
- திருத்தூதுப் பொழிவு (மத்தேயு அதி. 10)
- உவமைப் பொழிவு (மத்தேயு அதி. 13)
- திருச்சபைப் பொழிவு (மத்தேயு அதி. 18)
- நிறைவுகாலப் பொழிவு (மத்தேயு அதி. 24-25)
மேற்கூறிய ஐந்து பொழிவுகளையும் அளித்து, தம் மூல ஆதாரங்களைப் பயன்படுத்தி, இயேசு ஒருவரே நம் ஆசிரியர் (மத் 23:10) என மத்தேயு நிலைநாட்டுகிறார். இயேசுவின் போதனைப் பகுதியில் மாற்குவை விட அதிகக் கருத்துகளும் தருகிறார்.
பழைய ஏற்பாட்டின் திருச்சட்ட நூலாகிய தோராவில்[3] ஐந்து நூல்கள் அமைந்திருப்பதுபோல் மத்தேயு நற்செய்தி நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன.
மத்தேயுவில் காணப்படுகின்ற ஐந்து பொழுவுகள் ஒவ்வொன்றின் முன்னும் பின்னும் பல நிகழ்ச்சித் தொகுப்புகள் தரப்படுகின்றன. இவ்வாறு, இயேசுவின் பொதுப்பணிக்கான தயாரிப்பு அதிகாரங்கள் 3-4 பகுதியில் விளக்கப்படுகிறது. மலைப் பொழிவுக்குப் பின்னர், திருத்தூதுப் பொழிவுக்கு முன்னால், இயேசு புரிந்த புதுமைகள் தரப்படுகின்றன (அதி. 8-9). உவமைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் போதனையைச் சிலர் ஏற்கின்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை என்பது விளக்கப்படுகிறது (அத். 11-12). திருச்சபைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் கலிலேயப் பணியும் இயேசு எருசலேமை நோக்கிப் பயணமாதலும் பேசப்படுகின்றன (அதி. 19-23).
இறுதியாக, அதிகாரங்கள் 26-28இல்.இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் விளக்கம் பெறுகின்றன. மாற்கு நற்செய்தி, இயேசுவின் கல்லறை வெறுமையாக இருந்தது என்ற செய்தியோடு முடிந்தது. ஆனால், மத்தேயு நற்செய்தியில், உயிர்த்தெழுந்த இயேசு கலிலேயாவில் தோன்றிய செய்தி சேர்க்கப்பட்டுள்ளது. அப்போது இயேசு தம் சீடர்களிடம் தம் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்குமாறு பணிக்கின்றார் (மத் 28:16-20).
மத்தேயு நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பட்டியலிட்டுக் காட்டலாம்.
மத்தேயு நற்செய்தி
நூலின் பிரிவுகள்
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
முன்னுரை: இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும் | அதிகாரங்கள் 1 முதல் 2 முடிய | 5 - 7 |
பகுதி 1: விண்ணரசு பறைசாற்றப்படல்
1. நிகழ்ச்சி
|
அதிகாரங்கள் 3 முதல் 7 முடிய
அதிகாரங்கள் 3 முதல் 4 முடிய
|
7 - 16
7 - 9
|
பகுதி 2: விண்ணரசுப் பணி
1. நிகழ்ச்சி
|
அதிகாரங்கள் 8 முதல் 10 முடிய
அதிகாரங்கள் 6 முதல் 9 முடிய
|
16 - 22
16 - 20
|
பகுதி 3: விண்ணரசின் தன்மை
1. நிகழ்ச்சி
|
அதிகாரங்கள் 11 முதல் 13:52 முடிய
அதிகாரங்கள் 11 முதல் 12 முடிய
|
22 - 29
22 - 26
|
பகுதி 4: விண்ணரசின் அமைப்பு
1. நிகழ்ச்சி
|
அதிகாரங்கள் 13:53 முதல் 18 முடிய
அதிகாரங்கள் 13:53 முதல் 17 முடிய
|
29 - 38
29 - 36
|
பகுதி 5: விண்ணரசின் வருகை
1. நிகழ்ச்சி
|
அதிகாரங்கள் 19 முதல் 25 முடிய
அதிகாரங்கள் 19 முதல் 23 முடிய
|
38 - 53
38 - 48
|
முடிவுரை: இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும் | அதிகாரங்கள் 26 முதல் 28 முடிய | 53 - 61 |
ஆதாரங்கள்
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம்
- விவிலியம் KJV
- ஆங்கில விக்கிபீடியா