பிரதாப்கர் இராச்சியம்
பிரதாப்கர் প্রতাপগড় | |
---|---|
கி.பி.1489–1700க
| |
![]() நவீன கால கரீம்கஞ்சு மாவட்டமும் (நீலம்) அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் | |
தலைநகரம் | பதர்கண்டி |
சமயம் | இசுலாம், இந்து சமயம், பழங்குடியின சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
ராஜா சுல்தான் | |
• 1489–1490 | மாலிக் பிரதாப் (முதல்) |
• சுமார் 1700கள் | அப்தாப் உதீன் (கடைசி) |
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்தியா |
• திரிபுரா இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெற்றது | 1489 |
• கச்சாரிகளின் வெற்றி | 1700கள் |
பிரதாப்கர் இராச்சியம் ( Pratapgarh Kingdom) இந்திய துணைக்கண்டத்தின் வடகிழக்கில் ஒரு இடைக்கால மாநிலமாக இருந்தது. இன்றைய இந்திய மாவட்டமான கரீம்கஞ்ச், திரிபுரா மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் வங்காளதேசத்தின் சில்ஹெட் ஆகியவற்றைக் கொண்ட இந்த இராச்சியம், இந்து மற்றும் இஸ்லாமிய ஆதரவாளர்களின் கலவையான மக்கள்தொகையில் முஸ்லிம் மன்னர்களின் வரிசையால் ஆளப்பட்டது. இது கச்சாரி, திரிபுரா மற்றும் வங்காளத்தின் பெரிய இராச்சியங்களின் எல்லையாக இருந்தது.
கிழக்கு வங்காளதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நவீன எல்லையை உருவாக்கும் மலைப்பாங்கான, காடுகளை மையமாகக் கொண்ட, பின்னர் பிரதாப்கரை உருவாக்கிய நிலங்கள் ஆரம்பத்தில் திரிபுராவின் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இங்கு முக்கியமாக இந்துப் பழங்குடியினர் வசித்து வந்தனர். கி.பி 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பூர்வீக மற்றும் பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நில உரிமையாளரான மாலிக் பிரதாப் என்பவரால் இப்பகுதி பிரிக்கப்பட்டது. அவர் இராச்சியத்தை நிறுவினார். எனவே அவரிடமிருந்து இப் பெயரைப் பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரது பேரன், சுல்தான் பாஜித்தின் ஆட்சியின் கீழ், பிரதாப்கரின் செல்வாக்கு அதன் உச்சத்தை எட்டியது. குறிப்பிடத்தக்க கலாச்சார மையமாகவும் வளர்ந்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ சக்தியாக மாறியது. வலுவான இராச்சியமான கச்சாரை தோற்கடித்தது. வங்காளத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நேரத்தில்தான் மாநிலம் அதன் பிராந்திய உச்சத்தை அனுபவித்தது. பின்னர் சில்ஹெட்டை சிலகாலம் ஆக்கிரமித்திருந்தது.
பிரதாப்கர் இறுதியில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கசாரிகளால் கைப்பற்றப்பட்டு கலைக்கப்பட்டது. அதன் ஆளும் குடும்பம் பின்னர் ஆங்கிலேயர்களின் கீழ் ஜமீந்தார்களாக மட்டுமே ஆட்சி செய்தது. இருப்பினும், இராச்சியத்தின் மரபு இப்பகுதியில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பெயர் அப்பகுதியில் அடுத்தடுத்த நிர்வாகப் பிரிவுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
வரலாறு
[தொகு]வரலாற்றாசிரியர் அச்யுத் சரண் சௌத்ரியின் கூற்றுப்படி, துரானியின் கொள்ளுப் பேரன் மாலிக் பிரதாப் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியின் ஆட்சியாளராக இருந்தார். இந்த கட்டத்தில், அப்போதைய தற்போதைய உரிமையாளரான அமீர் அஜ்பரின் மகளை திருமணம் செய்து கொண்டு, பதர்கண்டியில் உள்ள பிரதாப் சிங்கின் முன்னாள் நிலங்களையும் அரண்மனையையும் பிரதாப் பெற்றார்.[1][2]
1489 ஆம் ஆண்டில், திரிபுராவின் மகாராஜா பிரதாப் மாணிக்யா தனது மூத்த சகோதரர் தன்யாவுக்கு எதிராக தனது இராணுவத் தளாபதிகளின் உதவியுடன் அரியணை ஏறினார். இந்த நேரத்தில் மாலிக் பிரதாப் திரிபுராவின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதாப்கரை (தற்போதைய கரீம்கஞ்ச் மாவட்டத்திற்குச் சமமான பகுதி) பிரித்து, அதன் சுதந்திர ஆட்சியாளராக தன்னை அறிவித்துக் கொண்டார்.[3][4] மாலிக் பிரதாப் பின்னர் மகாராஜாவின் போரில் உதவினார். இந்த உதவியின் மூலம் அவரது நட்பைப் பெற்றார். நன்றி செலுத்தும் வகையில், மாணிக்யா பிரதாப்கரின் சுதந்திரத்தை அங்கீகரித்து மாலிக் பிரதாப்புக்கு ராஜா பட்டத்தை வழங்கினார். இதைத் தொடர்ந்து, மகாராஜா தனது மகள் இரத்னாவதி தேவியை மாலிக் பிரதாப்பின் பேரனான பாசித் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இருப்பினும், 1490 இல், பிரதாப் மாணிக்யா அவரது தளபதிகளால் படுகொலை செய்யப்பட்டார். மாலிக் பிரதாப் விரைவில் இறந்தார்.[5][6]
வங்காள சுல்தானுக்கு எதிரான போர்
[தொகு]
அரியணையில் ஏறிய பிறகு, மைபோங்கின் மீதான கச்சாரிகளின் படையெடுப்பை பாசித் முறியடித்தார். பிறகு , அவர் தன்னை சுல்தான் என அறிவித்துக் கொண்டார். வங்காள சுல்தானின் அதே மட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[7] அவரது தலைநகரம் புறக்காவல் நிலையங்கள் மற்றும் கோட்டைகளுடன் தொடர்புடையது . மேலும் ஒரு முக்கியமான வர்த்தக மையமாகவும் வளர்ந்தது.[8] மலர் கற்கள் இப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகின்றன.[3]
பாசித்தின் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தின் போதுதான் சில்ஹெட்டின் வங்காள ஆளுநராக இருந்த கௌஹர் கான் இறந்தார். கானின் உதவியாளர்களான சுபித் ராம் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் அவரது மரணத்தை சாதகமாக பயன்படுத்தி மாநில அரசின் பெரும் தொகையை கையாடல் செய்தனர். பின்னர், வங்காள சுல்தான் அலாவுதீன் உசேன் ஷாவின் கோபத்திற்கு பயந்து, அவர்கள் பிரதாப்கருக்கு ஓடிவிட்டனர். [9] தப்பியோடிய இருவருக்கும் பாசித் தனது பாதுகாப்பைக் கொடுத்தார். மேலும் சில்ஹெட்டில் உள்ள ஒற்றுமையின்மையைக் கண்டு, மாவட்டத்தின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றி தனது பகுதியுடன் சேர்த்தார்.[10]
உசைன் ஷா, போரைத் தவிர்க்க விரும்பி, பிரதாப்கரின் சுல்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது பிரபுக்களில் ஒருவரான சுர்வார் கான் என்பவரை அனுப்பினார்.[9][11] இது தோல்வியில் முடிந்தது. சுர்வார் கானுக்கு ஆதரவாக கன்காட்டி மற்றும் இட்டா பகுதியின் ஜமீந்தார்கள் பாசித்துக்கு எதிராக போர் தொடுத்தனர்.[12] கிளர்ச்சியாளர்கள் சிறப்பாகப் போரிட்டதாகக் கூறப்பட்டாலும், குறிப்பாக பாசித்தின் மகன் மர்கமத் கானின் வித்தியாசனமான போரினால் கிளர்ச்சியாளர்கள் பணிந்தனர்.[9]
உசைன் ஷா, பாசித் பிரதாப்கரின் ஆட்சியாளராகத் தொடர அனுமதிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் சில்ஹட்டின் கட்டுப்பாட்டையும், சுல்தான் பட்டத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. பாசித்தின் விசுவாசத்தைக் காட்ட பணம் மற்றும் யானைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது. இறுதியாக, சுர்வார் கான் சில்ஹெட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். பாசித்தின் மகள் இலாவண்யாவதியை சுர்வாரின் மகனும் வாரிசுமான மிர் கானுக்கு திருமணம் செய்து வைத்தார்.[9][12] வயதான பாசித் தோல்விக்குப் பிறகு விரைவில் இறந்தார்.[9]
இந்த நிகழ்வின் காலமும், அதே போல் பாசித்தின் ஆட்சிக்காலம் ஆகியவை வரலாற்றாளர்களிடையே சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. மேற்குறிப்பிட்ட கணக்கை ஆதாரமாகக் கொண்ட சௌத்ரி, பாசித் கோபப்படுத்திய சுல்தான் அலாவுதீன் உசைன் ஷா எனக் கருதுகிறார். அவருடைய ஆட்சி கிபி 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. [9][13] இருப்பினும், அசாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சுபீர் கர், ஆட்சியாளர் ஜான்பூரின் இதே போன்ற பெயரிடப்பட்ட உசைன் ஷா சிர்கி என்று அடையாளம் காட்டினார். அதற்குப் பதிலாக கி.பி 1464 இல் நடந்த மோதல் விவரிக்கப்பட்டுள்ளது. [10] இந்த வருடங்களை இந்தியக் குடிமைப் பணி ஆணையரான பாசில் கோப்லெஸ்டன் ஆலன் தனது அஸ்ஸாம் மாவட்ட கெசட்டியர்ஸில் பிரதிபலிக்கிறார்.[14] மாற்றாக, சையத் முர்தாசா அலி, மாலிக் பிரதாப் மற்றும் பாசித் இருவரின் வாழ்நாளையும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, பிந்தைய ஆட்சியாளர் முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் சமகாலத்தவராக இருந்தார். 1612 கி.பி.யில் வங்காளத்தின் முகலாய ஆளுநரான முதலாம் இஸ்லாம் கானால் அடிபணியாமல் இருந்த சில்ஹெட்டின் பயாசித்தை ஒத்தவர் என்று அலி கூறுகிறார்.[15]
நவீன பிரதாப்கர்
[தொகு]அசாமின் தெற்கே பராக் பள்ளத்தாக்கு, பிரதாப்கர் பகுதியைச் சூழ்ந்துள்ளது. [16] இங்கு வங்காள இனத்தவர்களின் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.[17] அண்டை நாடான சில்ஹெட்டைப் போலவே, இவர்களும் சில்ஹெட்டி என்று அழைக்கப்படும் வங்காள மொழியின் பொதுவான பேச்சுவழக்கைப் பேசுகிறார்கள். [18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Choudhury (2000), ப. 288.
- ↑ Nath (1948), ப. 81.
- ↑ 3.0 3.1 Choudhury (2000), ப. 290.
- ↑ Chaudhury (1979), ப. XI.
- ↑ Choudhury (2000), ப. 291.
- ↑ Durlabhendra, Sukheshwar & Baneshwar (1999), ப. 60.
- ↑ Choudhury (2000), ப. 292.
- ↑ Sinha, Chacko & Aier (1993), ப. 41.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 Choudhury (2000), ப. 294.
- ↑ 10.0 10.1 Kar (2008), ப. 135.
- ↑ Bhattacharjee (1994), ப. 74.
- ↑ 12.0 12.1 Motahar (1999), ப. 715.
- ↑ Tarafdar (1999), ப. 376.
- ↑ Allen (2013), ப. 94.
- ↑ Ali (1965), ப. 69.
- ↑ Bhattacharjee (1994), ப. 66.
- ↑ Bhattacharjee (1994), ப. 63.
- ↑ Bhattacharjee (1986), ப. 81.
உசாத்துணை
[தொகு]- Abbasi, Mustafa Zaman; Al Helal, Bashir (1979), Folkloric Bangladesh, Dhaka: Bangladesh Folklore Parishad
- Agrawal, Ankush; Kumar, Vikas (2020), Numbers in India's Periphery: Political Economy of Government Statistics: The Political Economy of Government Statistics, India: Cambridge University Press, ISBN 978-1-108-48672-9
- Ali, Syed Murtaza (1965), হযরত শাহ জালাল ও সিলেটের ইতিহাস (in Bengali), Dhaka: বাঙলা একাডেমী
- Allen, Basil Copleston (2013) [1905], Assam District Gazetteers, vol. 2 (2nd ed.), Guwahati: Narayani Handiqui Historical Institute, ISBN 9780343330132
- Bhattacharjee, J.B. (1982), "Mirza Nathan's Kachar", Social Research, 2 (3), Shillong: Pub. Division
- Bhattacharjee, J.B. (1994), Milton S. Sangma (ed.), "The Pre-Colonial Political Structure of Barak Valley", Essays on North-east India: Presented in Memory of Professor V. Venkata Rao, New Delhi: Indus Publishing, ISBN 978-81-7387-015-6
- Bhattacharjee, J.B. (2005), "Revolt of Nawab Radharam (1786)" (PDF), Proceedings of North East India History Association, 26, Guwahati: Gauhati University, archived from the original (PDF) on 2021-10-31, retrieved 2023-10-27
- Bhattacharjee, Jayanta Bhusan (1986), H. K. Barpujari (ed.), "Glimpses of the Pre-Colonial History of Cachar", Studies in the History of North-East India: Essays in Honour of Professor H.K. Barpujari, Shillong: North Eastern Hill University Publications
- Bhattacharjee, Jayanta Bhusan (1991), Social and polity formations in pre-colonial north-east India: the Barak Valley experience, New Delhi: Har-Anand Publications in association with Vikas Pub. House, ISBN 9780706954647
- Chaudhury, A.K. Dutta (1979), Some aspects of socioeconomic conditions of Karimganj since independence with special reference to community development (PDF), Gauhati: Gauhati University
- Choudhury, Achyut Charan (2000) [1910], Srihatter Itibritta: Purbangsho (in Bengali), Kolkata: Kotha
- Choudhury, Achyut Charan (2006) [1917], Srihatter Itibritta: Uttarrangsho (in Bengali), Kolkata: Basanti Press
- Choudhury, Sujit (1977), A study of the folkcults of the Bengalee Hindus of Cachar district (PDF), Gauhati: Gauhati University
- Choudhury, Sujit (1980), "The origin and development of Kapilashram of Gangasagar and Siddheswar– an outline of comparative study", Folk-lore, 21 (10), Indian Publications
- Choudhury, Sujit (1996), Folklore and History: A Study of the Hindu Folkcults of the Barak Valley of Northeast India, Delhi: K.K. Publishers
- Clothey, Fred W. (1982), Images of Man: Religion and Historical Process in South Asia, Madras: New Era Publications
- Das, Partha Sarathi (2008), Herbaceous flora of Karimganj district Assam with reference to their economic utility (PDF), vol. I, Silchar: Assam University
- Durlabhendra; Sukheshwar; Baneshwar (1999), Sri Rajmala, translated by Kailāsa Candra Siṃha; N.C. Nath, Agartala: Tribal Research Institute, Govt. of Tripura
- Guha, Upendra Chandra (1971), কাছাড়ের ইতিবৃত্ত (in Bengali), Guwahati: আসম প্রকাশন পরিষদ
- Kar, Subira (2008), 1857 in North East: a reconstruction from folk and oral sources, New Delhi: Akansha Publishing House, ISBN 978-81-8370-131-0
- Mali, Dharani Dhar (1985), Revenue Administration in Assam, New Delhi: Omsons Publications
- Mittal, K.M. (1984), Report on the Administration of North East India, Delhi: Mittal Publications
- Motahar, Hosne Ara (1999), Sharif Uddin Ahmed (ed.), "Museum Establishment and Heritage Preservation: Sylhet Perspective", Sylhet: History and Heritage, Sylhet: Bangladesh Itihas Samiti, ISBN 978-984-31-0478-6
- Nath, Rajmohan (1948), The back-ground of Assamese culture, Nongthymmai: A. K. Nath
- Nathan, Mirza (1936), Bahāristān-i-Ghaybī: A History of the Mughal Wars in Assam, Cooch Behar, Bengal, Bihar and Orissa During the Reigns of Jahāngīr and Shāhjahān, vol. I, translated by M.I. Borah, Government of Assam, Department of Historical and Antiquarian Studies, Narayani Handiqui Historical Institute
- Nazir, Ahamad (2013), "The Muslims in Manipur: A study in their History and Culture", INFLIBNET, Imphal: Manipur University, hdl:10603/39985
- Sanajaoba, Naorem (1988), Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization, vol. 4, New Delhi: Mittal Publications, ISBN 978-81-7099-853-2
- Sinha, Awadhesh Coomar; Chacko, Pariyaram Mathew; Aier, I. L. (1993), Hill cities of eastern Himalayas: ethnicity, land relations and urbanisation, New Delhi: Indus Publishing Company, ISBN 978-81-85182-80-3
- Tarafdar, Momtazur Rahman (1999), Husain Shahi Bengal, 1494-1538 A.D.: A Socio-political Study, Dhaka: University of Dhaka