பயனர் பேச்சு:கோ.செங்குட்டுவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், கோ.செங்குட்டுவன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மணியன் (பேச்சு) 13:47, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்[தொகு]

வணக்கம், கோ.செங்குட்டுவன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 03:25, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் தொடர்ந்து எழுதுவது குறித்து...[தொகு]

அன்புடையீர், வணக்கம்.

கட்டற்றத் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா என் மனம்கவர்ந்தது.

இதில் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்றுகூட சொல்லலாம்.

இதற்கான சந்தர்ப்பம் வாய்த்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக எழுதி வருகிறேன்.

ஆனாலும் இன்று, பேச்சு பக்கத்தில் “பதிப்புரிமை மீறல்” எனும் தலைப்பில் எனக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் “ நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கானப் பொருள் எனக்கு விளங்கவில்லை.

நான் எழுதுவது அனைத்தும் என்னுடைய எழுத்துக்கள்தான். வேறெங்கிருந்தும் அல்லது வேறொறுவரிடமிருந்து பெறப்பட்டதல்ல.

இந்தச் சூழலில் “பதிப்புரிமை மீறல்” என்பது எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

இதற்கான விளக்கத்தினை வேண்டுகிறேன்.

விக்கிப்பீடியாவில் நான் தொடர்ந்து எழுதமுடியுமா?

இதற்கு நான் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?

எழுதலாம் எனில் இக்கட்டுரைகளில் புகைப்படங்களை இணைப்பது எப்படி?

தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி. கோ.செங்குட்டுவன்.

  • உங்களைச் சந்திப்பதிலே மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து எழுதலாம். மணல்தொட்டி என்பதில் முதலில் எழுதுங்கள். படங்களைப் பொருத்தவரை நீங்கள் எடுத்தபடங்களாக இருக்க வேண்டும். பிறிரின் படங்களை பதிவேற்றக் கூடாது. மேலும் சில அணுகுமுறைகள் இங்கு செயற்பட, பின்பற்றப்பட வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக அறியலாம். நீங்கள் எந்த ஊரில் இருந்து தற்போது, பங்களிப்பு செய்கிறீர்கள்? மீண்டும் தொடர்பு கொள்கிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 07:23, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நீங்கள் இந்த வலைப்பதிவில் இருந்து எந்த மாற்றமும் இல்லாது அப்படியே copy - paste செய்திருக்கிறீர்கள். இப்பதிவை நீங்கள் எழுதியிருந்தாலும், அதனை இங்கு வெளியிடுவது அது பதிப்புரிமை மீறியது. விக்கிப்பீடியா கட்டுரை எழுதுவது எவ்வாறு என்பது பற்றி மேலே தந்துள்ள இணைப்புகளில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:01, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சிங்க,ஐயா.

நான் பயன்படுத்தும் புகைப்படங்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்டவை.

விழுப்புரத்தில் இருந்து எழுதுகிறேன்.

நன்றி!

கோ.செங்குட்டுவன்.

தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

இணைப்பில் காட்டப்பட்டுள்ளத் தளத்தில் என்னுடையப் பதிவு வந்திருப்பது எனக்குத் தெரியாது. ஆனாலும், முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறேன். இதனைச் சிலர் எடுத்தாண்டு வருகின்றனர்.

ஆனாலும் விக்கிப்பீடியாவின் பயன்பாட்டு விதிகளை இனித் தொடர்ந்து பின்பற்றுகிறேன்.

எதிலும் பதிவேறாதத் தகவல்களை விக்கிப்பீடியாவில் (மணல் தொட்டியில்) பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.


விக்கிப்பீடியாவில் பதிவு செய்வதை, பின்பு மற்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றலாமா? இல்லை, விக்கிப்பீடியாவில் மட்டும்தான் பதிவிடவேண்டுமோ? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

விழுப்புரத்தைச் சேர்ந்த நான், 25ஆண்டுகாலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றி, தற்போது முழுநேர எழுத்துப் பணியை மேற்கொண்டிருக்கிறேன்.

மண் சார்ந்த மூன்று நூல்களை எழுதியிருக்கிறேன்.

என் படைப்புகளும் இதனைப் பின்பற்றித்தான் இருக்கும்.

நன்றி.

கோ.செங்குட்டுவன்.

விக்கிப்பீடியாவில் வெளியிடப்படும் கட்டுரைகள் அனைத்துக்கும் மேற்கோள்கள் சுட்டுதல் வேண்டும். வலைப்பதிவுகள், முகநூல்களை மேற்கோள்களாகச் சுட்ட முடியாது. நூல்கள், செய்தித்தாள்கள், போன்றவற்றில் இருந்து மேற்கோள்கள் சுட்டலாம். கட்டுரை எழுதிப் பழக உங்கள் பயனர்:கோ.செங்குட்டுவன்/மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பெருமளவு படங்கள் விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ளன. உங்கள் கட்டுரைக்குத் தேவையானவை அங்கும் இருக்கலாம். அவற்றை நீங்கள் இங்கு உங்கள் கட்டுரைகளில் பயன்படுத்தலாம். உங்கள் சொந்தப் படங்களை பொதுவகத்தில் தரவேற்றி விட்டு, கட்டுரைகளில் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:33, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]