செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 52: வரிசை 52:


==அரசியல் வாழ்க்கை==
==அரசியல் வாழ்க்கை==
சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். [[இலங்கை அரசாங்க சபை]]க்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|நாடாளுமன்றத் தேர்தலில்]] [[வவுனியா தேர்தல் தொகுதி|வவுனியா]]வில் [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றத்துக்குத்]] தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> அன்றைய [[ஐக்கிய தேசியக் கட்சி]] அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறிந்த்த சர்ச்சைக்குரிய இலங்கைக் குடியுரிமைச் சட்டம்|இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு]] ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார். அன்றைய [[இலங்கை பிரதமர்]] [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க|டி. எசு. சேனநாயக்கா]] இவரது நடத்தை குறித்துக் கெள்வி எழுப்பியதை அடுத்து, தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.

1951 ஆம் ஆண்டில் [[இலங்கையின் தேசியக்கொடி]]யாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து சுந்தரலிங்கம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name="BE">{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/ByElections1947-1988.pdf|title=SUMMARY OF BY -ELECTIONS 1947 TO 1988|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results 1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

11:02, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

சி. சுந்தரலிங்கம்
தொழில், வணிகத்துறை அமைச்சர், இலங்கை
பதவியில்
1947–1948
இலங்கை நாடாளுமன்றம்
for வவுனியா
பதவியில்
1947–1959
பின்னவர்ரி. சிவசிதம்பரம், சுயேட்சை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-08-19)19 ஆகத்து 1895
இறப்பு11 பெப்ரவரி 1985(1985-02-11) (அகவை 89)
வவுனியா, இலங்கை
அரசியல் கட்சிஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி
முன்னாள் கல்லூரியாழ் பரி யோவான் கல்லூரி
பரி. யோசேப்பு கல்லூரி, கொழும்பு
இலண்டன் பல்கலைக்கழகம்
ஒக்சுபோர்டு பல்கலைக்கழகம்
தொழில்கல்விமான், ஆசிரியர், வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

செல்லப்பா சுந்தரலிங்கம் (Chellappah Suntharalingam, 1895 ஆகத்து 19 - 1985 பெப்ரவரி 11) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். தமிழீழம் என்ற கோட்பாட்டை முன்வைத்த தலைவர்களில் முக்கிய இடம் வகிப்பவர்.

ஆரம்ப வாழ்க்கை

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, கொழும்பு புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், 1914 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், இந்தியக் குடிமைப் பணியில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.

சுந்தரலிங்கத்திற்கு நான்கு சகோதரர்கள். செ. நாகலிங்கம், இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், 1954 இல் பதில் மகாதேசாதிபதியாகவும் இருந்தவர்; அடுத்தவர் செ. பஞ்சலிங்கம் ஒரு மருத்துவர், செ. அமிர்தலிங்கம் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளராகப் பணியாணியவர், அடுத்தவர் செ. தியாகலிங்கம் ஒரு பிரபல வழக்கறிஞர்.

கனகசபை என்பவரின் மகள் கனகாம்பிகை அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஞானலிங்கம், சத்தியலிங்கம், லிங்காம்பிகை, லிங்காவதி, லிங்காமணி, லிங்கேசுவரி என ஆறு பிள்ளைகள்.

அரசியல் வாழ்க்கை

சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். இலங்கை அரசாங்க சபைக்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.[1] அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறிந்த்த சர்ச்சைக்குரிய இலங்கைக் குடியுரிமைச் சட்டம்|இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு]] ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார். அன்றைய இலங்கை பிரதமர் டி. எசு. சேனநாயக்கா இவரது நடத்தை குறித்துக் கெள்வி எழுப்பியதை அடுத்து, தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.

1951 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசியக்கொடியாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து சுந்தரலிங்கம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 1952 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.[3]

மேற்கோள்கள்

  1. 1947%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)
  2. "SUMMARY OF BY -ELECTIONS 1947 TO 1988" (PDF). Department of Elections, Sri Lanka.
  3. 1952%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. {{cite web}}: Check |url= value (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சுந்தரலிங்கம்&oldid=1230253" இலிருந்து மீள்விக்கப்பட்டது