ராஜ் தாக்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜ் தாக்ரே
Raj Thackeray
அரசியல் கட்சி மஹாராஷ்டிர நவநிர்மாண சேனா கட்சியின் நிறுவனரும், தலைவரும் (2006 இல் இருந்து)

பிறப்பு சூன் 14, 1968 (1968-06-14) (அகவை 44)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
வாழ்க்கைத்
துணை
சர்மிலா தாக்ரே
பிள்ளைகள் அமித், ஊர்வசி
இருப்பிடம் மும்பை
சமயம் இந்து
இணையதளம் www.manase.org

ராஜ் ஸ்ரீகாந்த் தாக்ரே (Raj Thackeray, மராத்தி: राज ठाकरे, பிறப்பு: ஜூன் 14, 1968) மஹாராஷ்டிர நவநிர்மாண சேனா ("மஹாராஷ்டிர புரட்சிப் படை") நிறுவனத் தலைவர் ஆவார். இக்கட்சி இந்தியாவில், மகாராஷ்டிராவில் உள்ள, ஒரு மாநில அரசியல் கட்சியாகும்.

இவர் முன்னாள் சிவ சேனாவின் தலைவர் பால் தாக்ரேயின் மருமகனும், தற்போதைய சிவ சேனாவின் செயற்குழுத் தலைவரான "உத்தவ் தாக்ரே"யின் அத்தை மகனுமாவார்.

பொருளடக்கம்

வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

ராஜ் தாக்ரே ஜூன் 14, 1968ல் ஒரு மராத்திய காயஸ்தா (சிகேபி) குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுவராஜ் தாக்ரே[1]. இவரது தந்தை, ஸ்ரீகாந்த் சிவ சேனாவின் உயர்தலைவர் பாலா சாஹேப் தாக்ரேவின் இளைய சகோதரரும், மற்றும் அவரது தாயார், குந்தா தாக்ரே பாலாசாஹேப் தாக்கரேவினுடைய மனைவியாகிய மீனா தாக்ரேயின் இளைய சகோதரியுமாவார். ராஜ் ஷர்மிளாவைத் திருமணம் புரிந்துள்ளர். ஷர்மிளா பிரசித்தி பெற்ற மராத்தி நடிகரும், தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான மோகன் வாக்கினுடைய மகள். அவர்களுக்கு அமிட் என்னும் ஒரு மைந்தனும், ஊர்வசி என்று ஒரு மகளும் உள்ளனர். அவரது இரு குழந்தைகளும் மும்பையில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் மேனிலைப்பள்ளியில் படித்தனர்.

மத்திய மும்பையில் தாதர் புறநகரில் அமைந்த, பால் மோஹன் வித்யா மந்திர் பள்ளியில் ராஜ் தாக்ரே கல்வி பயின்றார் மற்றும் பெருமைவாய்ந்த "ஸர் ஜே.ஜே. கலைக்கல்லூரியில்" பட்டம் பெற்றார்[2].

தனது தந்தை மற்றும் மாமாவைப்போல, ராஜ் கருவிலே திருவுடைய வண்ண ஓவியரும் மற்றும் கேலிச்சித்திரக்காரருமாவார். அரசியலில் ஈடுபடாதிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என அவரை வினவியபோது அவர் கூறியதாவது: "எனது கல்லூரி நாட்களில், நான் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் பணிபுரிய விரும்பினேன். நான் கேலிச்சித்திரங்கள் அரசியலில் தாக்கம் பெறும்முன்னேயே வரைந்து கொண்டிருந்தேன். படத்தயாரிப்பு எனது பேரார்வமாகும். இந்த இரண்டில் ஒன்றை நான் செய்து கொண்டிருந்திருப்பேன்" என்றார்[3][4][5]. ராஜ், மும்பை மற்றும் அதன் புற நகரில் உட்கட்டமைப்பு மேம்படுத்தும், மடோஸ்ரீ பில்டர்ஸ் என்கிற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

அவரது அத்தை மகன் உத்தவ் தாக்ரே போல் ராஜ் ஓர் ஆர்வமிக்க புகைப்படக்கலைஞராவார்[6]. அவர் தனது மாமாவின் நிழற்பட-சுயசரிதை ஒன்றை 'பால் கேஷவ் தாக்ரே'- என்ற தலைப்பில் வெளியிட்டார்.[6]

அரசியல் வாழ்க்கை [தொகு]

மும்பையின் சிவாஜிப் பூங்காவில், ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்கள் பேரணியில் கலந்துகொள்ளல்

ராஜ் தாக்ரே தனது அரசியல் வாழ்க்கையை தன் மாமா (பால் தாக்ரே)வின் மகாராஷ்டிரா சிவ சேனாகட்சியில் சேர்ந்து துவக்கினார்.

ஜூன் 14, 1996 இல், மகாராஷ்டிராவில் ஒரு வேலைவாய்ப்புப் பெருக்கம் தொடங்கவேண்டி, ராஜ் தாக்ரே சிவ உத்யோக் சேனாவை அமைத்தார்[7]. அதன் நோக்கங்களுள் ஒன்று வேலையின்றி உள்ள மராத்திய இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்புக்கான கடன்கள் வழங்கப்படவேண்டும் என்பதேயாகும்[1].

1996 இல், தனது அமைப்பிற்கு வேண்டிய நிதி பெற, அவர் மும்பை அந்தேரி விளையாட்டரங்கில் இந்தியாவிலேயே முதன்முறையாக மைக்கேல் ஜாக்ஸன் இசைநடன நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்தார்[1][8].

புனேயின் பல்வேறு குன்றுகள், அவைகளின் சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு கருதி புதிய நகர்புற வளர்ச்சித்திட்டங்களை விமர்சித்தார்[9]. 2003ல், ராஜ் மஹாராஷ்டிராவெங்கும், 76 லட்சம் மரக்கன்றுகள் நடவேண்டி ஓர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார் எனினும், அந்த பெருந்திட்டம் தொடங்கப்பட்டதே ஒழிய, ஒருபோதும் முடிவுறவில்லை[10].

9 மார்ச் 2006ல், ராஜ் தாக்ரே மஹாராஷ்டிர நவநிர்மாண சேனாவை (எம்என்எஸ்) என்கிற அமைப்பை உருவாக்கினார். பிறகு இவ்வமைப்பு பால் தாக்ரேயின் மகன் உத்தவ்வால் பொறுப்பேற்கப்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டார்.[11]. ராஜ் தாக்ரேயின் தலைமையை சிவ சைனிக்குகள் (சிவ சேனா உறுப்பினர்கள்) ஆதரித்ததால் , அவரது அத்தைமகனான உத்தவ் (பால் தாக்ரேயின் மைந்தன்) தம் பதவியை விட்டதன் பொருட்டு ஆதரவாளர்கள் அதில் இணைந்தனர். இக்கட்சி உள்ளூர் மராத்திய மக்கள் (மராத்தி மானூஸ்) பலன்பெறவேண்டும் என்ற கோட்பாட்டிற்காகவே நிறுவப்பட்டது.

2009 ஆம் ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்த மாநிலச்சட்டமன்றத் தேர்தலில், ராஜ் தாக்ரேயின் எம்என்எஸ் கட்சி 13 இடங்களில் அதாவது 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்தில் 145 இல் போட்டியிட்டு வென்றது.[12][13]

அக்டோபர் 2009 இல் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் 5.7% வாக்குகள் பெற்று வெற்றியடைந்தமையால், எம்என்எஸ் பிஜேபி-சிவசேனாவின் பாரம்பரிய கூட்டு வாக்குகளைப் பிளவுபெறச் செய்து, அதன்விளைவாக ஆளும் காங்கிரஸ்-கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர காரணமாக இருந்து உதவியது

இதுவும் 2009 பொதுத்தேர்தல்களின் போக்கையே ஒத்திருந்தது, அதன்படி எம்என்எஸ் சிவசேனாவின் பராம்பரிய மராத்திய வாக்குகளை விழுங்கிவிட, மீண்டும் இது காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் மகாராஷ்டிராவில் உள்ள லோக் சபா இடங்களை பெரும்பான்மையாக வென்றிட உதவியாக இருந்தது. எம்என்எஸ் தனது சொந்த வாக்கு அடித்தளம் ஏற்படுத்தி மதிப்பை பெற்றது. அந்த வாக்கு அடித்தளம் முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கியதாகும்.

சர்ச்சைகள் மற்றும் அரசியல் கிளர்ச்சிகள் [தொகு]

மாநில மனப்பான்மை: 2008 ல் நிகழ்ந்த வட இந்தியர்களுக்கெதிரான வன்முறைத்தாக்குதல் [தொகு]

பிப்ரவரி 2008ல் ராஜ் தாக்ரே தான் இயக்கும் எம்என்எஸ் அமைப்பின் பெயரால் ஓரு கிளர்ச்சி (போராட்டம்-கலவரம்)யை வட இந்திய மாநிலங்களான உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார்லிருந்து இருந்து வந்து குடியேறுபவர்களின் மேலாதிக்கம் இருப்பதாகக் கருதி அதனை எதிர்த்து வணிகத்தலைநகரான மும்பையில் நடத்தினார். சிவாஜிப் பூங்காவில், நடைபெற்ற பேரணியில் ராஜ் எச்சரிக்கை விடுத்தார். அதன்படி தாதாகிரி (அச்சுறுத்தும் மேலாத்திக்கம்) மும்பையில் மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து நிலவுமேயானால், அவர்களையெல்லாம் மெட்ரோபாலிஸ் பெருநகரத்தை விட்டே விரட்ட அவர் வற்புறுத்த நேரிடும் என்று கூறினார்.

அதனால் ராஜ், சமாஜ்வாடி கட்சித்தலைவர் அபு ஆஜ்மியுடன் கழகத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார் எனினும், பின்னர் ரூ 15,000 அபராதம் விதிக்கப்பட்டு அதைச் செலுத்தியதும் விடுவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ராஜின் இச்செயல் தன்னலமகவும் மற்றும் அரசியல் உள்நோக்கத்துடனும் இருந்ததாக பகிரங்கம கண்டனம் செய்தனர். அனைத்து தேசிய கட்சிகளும் ராஜ் தாக்ரேவின் மும்பை பற்றிய பார்வைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தினர்.

கினி கொலை வழக்கில் விடுவிக்கப்படுதல் [தொகு]

ஜூலை 1996ல், ரமேஷ் கினி என்பவர் புனேயில் ஒரு திரையரங்கில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். கினி மத்திய மும்பையில் உள்ள இடிந்துவிழும் நிலையிலுள்ள ஒரு குடியிருப்பில் வாடகைக்கு இருந்தார், அவரை அவரது வீட்டுச் சொந்தக்காரர், லஷ்மிகாந்த் ஷா, வீட்டிலிருந்து வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். ஷா, ராஜ் தாக்ரேயின் குழந்தை பருவ நண்பர் ஆவார். ராஜூவும் அவரது ஆட்களும் ரமேஷ் வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டியே கொன்றிருக்கலாம் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சிபிஐ அவ்வழக்கை, அது ஒரு தற்கொலையென தள்ளுபடி செய்தது.[14].

கோஹினூர் ஆலையின் சர்ச்சை [தொகு]

கோஹினூர் ஆலையின் நிலத்தை முன்பு சிவ சேன விற்க எதிர்ப்பு தெரிவித்தது , ஆனால் பின்னர் அவர்களின் தலைவரான ராஜ் தாக்ரே ஏலத்தில் பங்குகொண்டு மும்பையின் முன்னணி நிலவுடமையான அவ்விடத்தை வாங்கினார். 21 ஜூலை 2005ல், எண்.3ல் அமைந்த கோஹினூர் ஆலையின் ஒரு ஐந்து ஏக்கர் நிலத்தை, அதாவது மும்பை, தாதரில், சிவ சேனையின் தலைமையகமாக, சேனா பவன் உள்ள இடத்தில் இருந்து குறுக்காக செல்லும் சாலையில் , ராஜூ மற்றம் உமேஷ் ஜோஷியும் (மகாராடிராஷ்ராவின் முன்னாள் முதல்வரும் மற்றும் லோக் சபாவின் சபாநாயகர் மனோகர் ஜோஷியின் புதல்வரும்) சேர்ந்து ரூ 421 கோடி எனும் மிகப்பெரிய விலைகொடுத்து வாங்கினர். என்சிபி (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மும்பைத் தலைவர், சச்சின் அஹிர், அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்; அதாவது கோகினூர் ஆலை நிலம், வாங்க நாற்பது பேர்கள் ஏலம் கோரியதாகவம் ஆனால் அதில் மூன்று பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற வைத்ததாகவும் கூறினார். எனவே அவர் அந்த நடவடிக்கை வெளிப்படையாக இல்லாததால் மறு-ஏலம் விடக் கோரினார்[15].

ஜெயா பச்சனின் சர்ச்சைக்குரிய அறிக்கையின் விளைவுகள் [தொகு]

ஜெயா பச்சன், ராஜ்ய சபா எம்பி, ஒரு இந்தி திரைப்பட விழாவில் பேசும்போது தெரிவித்து என்னவெனில் அவர் உத்திரப்பிரதேசத்தில் இருந்து வந்தமையால் ஹிந்தியில் பேச உள்ளதாகவும் அதற்காக மஹாராஷ்டிர மக்கள் பொறுத்தருள வேண்டுமெனவும் கூறினார். இந்த பேச்சு அவருக்கு பிரசித்தி பெற வாய்ப்பளிக்கும் வண்ணமமைந்ததாகவும் அதுவும் உத்திரப்பிரதேச சமாஜ்வாடிக் கட்சிக்கு உதவிகரமாக இருந்ததாகவும் கருதப்பட்டது. அக்கட்சி முக்கியமாக இந்தி பேசும் முக்கிய மாகாணம் உத்திரப்பிரதேசத்தில் இயங்கிவந்தது. அக்கருத்து மராத்தியர்கள் மனத்தைப் புண்படுத்தியதாக கருதப்பட்டது. மராத்தியர்களின்[16] கீர்த்திக்கு ஊறுவிளைவித்ததாகக் கருதி ராஜ் தாக்ரே ஒரு பொதுக்கருத்தரங்கில் ஜெயா மன்னிப்புக் கோரினாலொழிய அமிதாப்பச்சனின் திரைப்படங்களை வெளியிட தடைவிதிப்போமென அச்சுறுத்தினார். எம்என்எஸ் வேலையாட்கள் திரையரங்குகளை தாக்க முற்பட்டனர். இந்தி சினிமாவின் உன்னதமான நடிகர், அமிதாப் பச்சன் நடித்த தி லாஸ்ட் லியர் திரைப்படம் வெளியிடும் அரங்குகளைக் குறிவைத்துத் தாக்கினார்கள். அமிதாப் பச்சன் மன்னிப்பு கேட்ட பிறகேதான் படம் வெளியிட சுமுகநிலை திரும்பியது[17].

ராஜின் மிரட்டலைத்தொடர்ந்து , மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்து ராஜுக்கு எதிராக வாயடைக்குமாறு உத்தரவிட்டது, அதனால் ராஜ் ஊடகங்களிடம் பேசுவதிலிருந்து விலகி இருந்தார்.

ச்ஹத் பூஜா மற்றும் குடியேறுபவர்கள் மீது கண்டன உரைகள் [தொகு]

ராஜ் தனது கட்சிப் பேச்சுகளில், வட இந்தியத் தலைவர்கள் ச்ஹத் பூஜாவை அரசியலாக்குவதாகவும், பீஹாரில் உள்ள பிரசித்திபெற்ற பண்டிகையை அவர் ஒரு "நாடகம்" என்றும் "அகந்தையின் காட்சி" என்று இகழ்ந்துரைத்தார். மேலும் அவர் ச்ஹத் பூஜாவை வடஇந்தியாவில் வாக்குகள் கவர உதவும் ஓர் அரசியல் தந்திரோபாயம் என்றும் எள்ளிநகையாடினார். பூஜாவை கடலில் நடத்தாமல் நதிக்கரையில் நடத்தும் நோக்கத்தை ஏன் என்று வினவினார். அவர்கள் மகாராஷ்டிராவில் இருக்கும் பொழுது மகாராஷ்டிரா விழாக்களைத்தான் கொண்டாட வேண்டுமெனவும் [18] தவிர உத்திரப்பிரதேச விழாக்களைக் கொண்டாடக் கூடாதென கோரிக்கையும் விடுத்தார்.

பிப்ரவரி 8ஆம் நாள் அவரது கேலிஉரைகளை எதிர்த்து பாட்னா சிவில் நீதிமன்றத்தில், அவர் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது[19]. அவரது கருத்துக்கள் எல்லா இடத்திலும்,அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் அவரை கடுமையாகச் சாடினார்கள். அப்போதைய ரயில்வே அமைச்சரும் முன்னாள் பீகார் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் மும்பைக்கு வந்து அந்த ச்ஹத் பூஜாவை ராஜ் வீட்டின், முன்னரே செய்யப்போவதாகச் சூளுரைத்தார் ஆயினும் அவர் அப்படிச் செய்யவில்லை.

அவர் மேலும் ராஜ்ஜை "அரசியலில் அவர் ஒரு சிறுபிள்ளை"எனக் கேலிசெய்தார். எனினும் நவநிர்மாண சேனாவின் தலைவர் ராஜ் இந்தியாவில் மிகவும் தொழில்துறையில் முன்னேறிய மகாராஷ்டிராவில் வெள்ளம்போல் பொங்கிவரும் குடியேற்றக்காரர்களை வேலை தேடி வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டினார்.[20]

எம்என்எஸ் தவைர் மேலும் குடியேற்றக்காரர்கள் உள்ளூர் பண்பாட்டை மதிக்கவில்லை என்றும் குறைகூறினார். பிப்ரவரி 9 ஆம்நாள், மும்பைக்கு வந்து அமரும் குடியேற்றக்காரர்கள் பற்றி தனது நிலைப்பாட்டை விளக்கிக் கூறியதாவது,"புதிய குடியேற்றக்காரர்கள் நகருக்குள் வந்த புகுவதை தடுக்க வேண்டும், ஆனால் அதேசமயம் ஏற்கனவே குடியேறியவர்கள் மராத்தி 'மக்கள்' மற்றும் அவர்களது பண்பாடு ஆகியவற்றுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்."[21]

பாம்பே-மும்பை சர்ச்சை: வேக் அப் சிட் [தொகு]

2009, அக்டோபர் 2 ஆம் நாள், எம்என்எஸ் வேலையாட்கள் வேக்அப் சிட் என்ற திரைப்பட வெளியீட்டை எதிர்த்து புனே மற்றும் மும்பையில் ஒரு சில திரையரங்களில் கலவரம் செய்தனர். ராஜ், மும்பை என்று குறிப்பிட வேண்டியதை பாம்பே என்று அப்படத்தில் குறிப்பிடுவதை ஆட்சேபம் தெரிவித்த பின்னரே அச்சம்பவம் நிகழ்ந்தது. மும்பை நகரம், பேச்சுவழக்குப் பரிபாஷையால் பாம்பே என்று பல காட்சிகளிலும் [22] மற்றும் ஒரு சில பாடல்களில் (பாடல்கள் புகழ்பெற்ற கவிஞர், ஜாவெத் அக்ஹ்தார் எழுதியது) பழைய காதல் நினைவுகளுக்கா பயன்படுத்தியதால் இவ்வாறு நிகழ்ந்தது.

படத்தின் தயாரிப்பாளர், கரன் ஜோஹர், ராஜ்ஜின் வீட்டிற்கே விரைந்து சென்று, தங்குதடைஇன்றி மன்னிப்புக் கோரியதோடு மட்டுமல்லாமல், ராஜ்விதித்த அனைத்து நிபந்தனைகளையும், குறிப்பாக படத்தின் 700 பிரேம்களில் ஒவ்வொன்றிலும் மன்னிப்பு வாசகம் சேர்ப்பது என்பதையும் ஏற்றுக்கொண்டார்.[23]

ராஜ் தாக்ரேயின் தலைமையின் கீழ் எம்என்எஸ் நடத்திய மகாராஷ்டிர சட்டமன்றக் கிளர்ச்சி [தொகு]

2009 நவம்பர் ,மாதம் திங்கட்கிழமை 9ஆம் நாள், மகாராஷ்டிர மாநிலச் சட்டமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது, எம்என்எஸ் உறுப்பினர்கள் சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ அபு அஸிம் ஆஸ்மி இந்தியில் பிரமாணம் எடுக்கவே எதிர்த்து கைகலப்பில் இறங்கி மராத்தியில் தான் பிரமாணம் எடுக்கவேண்டும் என அமளி செய்தனர் அதுவும் ராஜ் தாக்ரே உறுப்பினர்களுக்கு, 'பிரமாணம் மராத்தியில்தான் எடுக்க வேண்டும். தவறினால் கடும்விளைவுகள் சந்திக்க நேரிடும்" என்ற அச்சுறுத்தலால் கிளர்ச்சி ஏற்பட்டது.

அனால் ஆஸ்மியோ, தனக்கு மராத்தி தெரியாது எனக்கூறி ஹிந்தியிலேயே பிரமாணம் எடுத்தார். ஆஸ்மி ஹிந்தியில் பதவி பிரமாணம் எடுத்தது எம்என்எஸ் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்தது. இதனால் எம்என்எஸ் எம்எல்ஏக்கள் சபையிலேயே அவரை அடித்ததுடன் கன்னத்தில் அறையும் கொடுத்தனர். பிற எம்என்எஸ் உறுப்பினர்கள் கடத்திக்கொண்டு வந்த துணிப்பதாகைகளை ஏந்தி எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பி மேசைமேல் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். இதற்கு உடனேயே கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நிறைவேறி, நான்கு எம்என்எஸ் உறுப்பினர்கள் ஷிஷிர் ஷிண்டே, ரமேஷ் வாஞ்சலே, ராம் கதம் மற்றும் வசந்த கீத்தி நான்காண்டுக் காலம் சபையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மும்பை நாக்புர் இருநகரங்களிலும் சட்டமன்ற நடக்கும் போதெல்லாம் நுழையவும் கூடாதென்று தடைசெய்யப்பட்டனர். அபு அஸிம் ஒரே ஒரு எம்எல்ஏயை மட்டுமே அவர்கள் எதிர்த்தனர், ஆனால் மற்ற உறுப்பினர்கள் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் பிரமாணம் எடுக்கும்போது எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை[24]

குறிப்புகள் [தொகு]

  1. 1.0 1.1 1.2 http://www.jansamachar.net/display.php3?id=&num=14801&lang=English
  2. http://ibnlive.in.com/news/tough-guy-thackeray-from-the-days-of-raj/58885-37.html
  3. http://www.apakistannews.com/raj-thakre-wanted-to-work-with-walt-disney-84833
  4. http://newsx.com/story/30816
  5. http://www.mumbaipluses.com/thaneplus/index.aspx?page=article&sectid=2&contentid=2009020120090202165023716e7fc947f&sectxslt=&comments=true&pageno=1
  6. 6.0 6.1 "Raj: Sainik Rebel Now a Scholar?". DNA. Dec 07, 2005. http://www.dnaindia.com/mumbai/report_raj-sainik-rebel-and-now-a-scholar_1000968. Retrieved 2009-10-23. 
  7. http://www.shivudyogsena.org/origin.htm
  8. http://www.hinduonnet.com/fline/stories/20081121252302400.htm
  9. "Shiv sainiks to protect hills: Raj Thackeray". Indian Express. February 07, 2003. http://cities.expressindia.com/fullstory.php?newsid=43128. Retrieved 2008-12-07. 
  10. "Why politicians don’t save trees". Indian Express. May 18, 2003. http://cities.expressindia.com/fullstory.php?newsid=52334. Retrieved 2008-12-07. 
  11. "Raj Thackeray: The tiger cub". Rediff. 2005-12-01. http://specials.rediff.com/news/2005/dec/01sld1.htm. Retrieved 2002-01-03. 
  12. "Raj Thackeray in the hunt to become kingmaker". DNA. Oct 01, 2009. http://www.dnaindia.com/mumbai/report_raj-thackeray-in-the-hunt-to-become-kingmaker_1294143. Retrieved 2009-10-22. 
  13. "Rising star Raj Thackeray says his party will play fair". CNN-IBN. Oct 22, 2009. http://ibnlive.in.com/news/rising-star-raj-thackeray-says-his-party-will-play-fair/103744-37.html. Retrieved 2009-10-22. 
  14. http://www.rediff.com/news/1996/0209dili.htm
  15. http://www.business-standard.com/india/storypage.php?autono=214951
  16. http://www.youtube.com/watch?v=UvocwN5knfk
  17. http://www.khaleejtimes.com/weekend/inside.asp?xfile=/data/weekend/2009/October/weekend_October66.xml
  18. "Jaya takes on Raj; MNS, SP activists clash in Mumbai". The Hindu. 2008-02-03. http://www.rediff.com/news/2008/feb/03mns.htm. Retrieved 2008-04-04. 
  19. "Petition against Raj Thackeray in Patna court". Zee News. http://www.zeenews.com/articles.asp?aid=421796&sid=REG. Retrieved 2008-04-04. 
  20. "Right-wing Mumbai leader arrested". BBC NEWS. 2008-02-13. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7242617.stm. Retrieved 2008-07-26. 
  21. "'Respect Marathi manoos or leave Mumbai'". Rediff. 2008-02-09. http://www.rediff.com/news/2008/feb/09mumbai.htm. Retrieved 2008-04-04. 
  22. http://www.hindu.com/2009/10/03/stories/2009100356650100.htm
  23. http://movies.rediff.com/report/2009/oct/02/wake-up-sid-in-trouble.htm
  24. "Azmi attacked over Hindi oath, four MNS members suspended". The Hindustan Times. November 9, 2009. http://www.hindustantimes.com/News-Feed/india/Azmi-attacked-over-Hindi-oath-four-MNS-members-suspended/Article1-474547.aspx. Retrieved 2009-11-09. 

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_தாக்ரே&oldid=1354337" இருந்து மீள்விக்கப்பட்டது