திருச்சூர் வி. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சூர் வி. இராமச்சந்திரன் (பி. 1940) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் 14ஆவது வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியில் பாடினார். 18ஆவது வயதில் அனைத்திந்திய வானொலியின் கலைஞரானார். இராமச்சந்திரன், வேதியியலில் பட்டம் பெற்றவர். 1960ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை ஜி. என். பாலசுப்பிரமணியத்திடம் மாணவராக இசை பயின்றார். அதற்குப்பிறகு எம். எல். வசந்தகுமாரியிடம் மாணவராக இருந்தார். 1973ஆம் ஆண்டு, சாருமதி எனும் இசைக் கலைஞரை திருமணம் செய்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

சென்னை மியூசிக் அகாதெமியில் முதல்முறையாக டிசம்பர் 22, 1962ஆம் ஆண்டு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரையின்பேரில் இந்த வாய்ப்பு, இராமச்சந்திரனுக்குக் கிடைத்தது. சரியாக 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த அகாதெமியின் பெருமைமிகுந்த விருதான சங்கீத கலாநிதி விருது, சனவரி 1, 2013 அன்று வழங்கப்பட்டது.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]