ஈழப் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| இலங்கை உள்நாட்டுப் போர் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||
| பிரிவினர் | |||||||||
ஈழ இயக்கங்கள் |
|||||||||
| தளபதிகள் | |||||||||
| ஜே.ஆர். (1983-89) ஆர்.பிரேமதாசா (1989-93) |
வே. பிரபாகரன் (1983- ) | ||||||||
| பலம் | |||||||||
| 111,000[1] | 11,000[1] | ||||||||
| இழப்புகள் | |||||||||
| 15,000 சாவு (SLA and police force) 1,255 killed (IPKF) |
20,138 சாவு (as of December 31, 2006)[2][3] | ||||||||
| 32,000 பொதுமக்கள் கொலை | |||||||||
ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். இப்போரில் இது வரை 68,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப் படுகிறது [4] எனினும் சரியான எண்ணிகைகள் இதில் இருந்து வேறுபடலாம்.
பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும், தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:
- ஈழப் போர் I: (1983-1985; 1987) - ஈழ இயக்கங்கள், விடுதலைப் புலிகள் எதிர் இலங்கை இராணுவம், புலிகள் எதிர் இந்திய அமைதி காக்கும் படை
- ஈழப் போர் II: (1990-1995) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள்
- ஈழப் போர் III: (1995 - 1999) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம்
- ஈழப் போர் IV: (2006 - ) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள்
[தொகு] ஈழப்போருக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும்
| காரணம் | தற்போதைய நிலைமை |
| தனிச் சிங்களச் சட்டம் - (Official Language Act, No. 33 of 1956[1]) | தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் அரச மொழிகள்; ஆங்கிலம் இணைப்பு மொழி (13th Amedment, 14th November, 1987[2]). நடைமுறையில் பல இடங்களில் தமிழர்கள் காவல், நீதித் துறை உட்பட அனேக அரச சேவைகளை தமிழில் பெறுவது அரிது. தமிழ் கல்வி புத்தகங்கள் பல பிழைகளுடன் அச்சாகின்றன. தமிழ் மொழி சிதைத்துப் பயன்படுத்தப்படுகின்றது. Sri Lanka's 'Tamil implementation' |
| பெளத்தம் அரச சமயம் ஆக முதன்மைப்படுத்தப்படல். | இந்த நிலைமையில் மாற்றம் இல்லை. நடைமுறையில் பிற சமயத்தவர் தமது சமயத்தை பின்பற்றுவதில், பாதுகாப்பதில், மேம்படுத்துவதில் எந்தவித தடை இல்லையென்றாலும், இது சமமற்ற உரிமை பெற்ற குடியுருமை என்ற தோற்றப்பாட்டையும் அதன் அரசியல்-சட்ட வடிவகத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மேலும் சமயமும் அரசும் பிரிந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இது சற்றும் பொருட்படுத்தவில்லை. |
| இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் | முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பெரும் தொகை தகுதி திறமை பெற்ற தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை இந்த சட்டம் இல்லாமல் செய்தது. இவ்வாறு கல்வியில் தரம் குறைக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தற்போது இந்த சட்டத்தாலேயே உயர்கல்வியில் இடம் பெறும் அவல நிலை இன்று உள்ளது.
|
| தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் | தொடர்ந்து நடக்கின்றது. |
| தனிமனித உரிமைகள், இனக் குழுக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படாமை, பாதுகாக்கப்படாமை. | தொடர்ந்து நடக்கின்றது. |
| சிங்களமயமாக்கம் | தொடர்ந்து நடக்கின்றது |
| வேலைவாய்ப்பில் இனத்துவேசம் (இலங்கை) | தொடர்ந்து நடக்கின்றது |
| இலங்கை அரச பயங்கரவாதம் | தொடர்ந்து நடக்கின்றது |
| இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம் | தொடர்ந்து நடக்கின்றது |
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 International Institute for Strategic Studies, Armed Conflicts Database
- ↑ http://www.ploughshares.ca/libraries/ACRText/ACR-SriLanka.html
- ↑ http://www.satp.org/satporgtp/countries/shrilanka/index.html
- ↑ "Sri Lanka says sinks rebel boats on truce anniversary", Simon Gardner, Reuters, February 22, 2007.