தாலாட்டுப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
''கொவ்வை இதழ் மகளே - என்'' |
''கொவ்வை இதழ் மகளே - என்'' |
||
''குவிந்த நவரத்தினமே'' |
''குவிந்த நவரத்தினமே'' |
||
''கட்டிப் பசும்பொன்னே என்'' |
''கட்டிப் பசும்பொன்னே - என்'' |
||
''கண்மணியே கண் வளராய்'' |
''கண்மணியே கண் வளராய்'' |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
கண்ணே யடிச்சாரார் |
கண்ணே யடிச்சாரார் |
||
கற்பகத்தைத் தொட்டாரார் |
கற்பகத்தைத் தொட்டாரார் |
||
தொட்டாரைச் சொல்லியழு |
தொட்டாரைச் சொல்லியழு |
||
தோள் விலங்கு போட்டு வைப்போம் |
தோள் விலங்கு போட்டு வைப்போம் |
||
அடிச்சாரைச் சொல்லியழு |
அடிச்சாரைச் சொல்லியழு |
||
ஆக்கினைகள் செய்து வைப்போம் |
ஆக்கினைகள் செய்து வைப்போம் |
||
வரிசை 35: | வரிசை 37: | ||
மாமன் அடித்தானோ |
மாமன் அடித்தானோ |
||
மல்லி பூ செண்டாலே |
மல்லி பூ செண்டாலே |
||
அண்ணன் அடித்தானோ |
அண்ணன் அடித்தானோ |
||
ஆவாரங் கொம்பாலே |
ஆவாரங் கொம்பாலே |
||
பாட்டி அடித்தாளோ |
பாட்டி அடித்தாளோ |
||
பால் வடியும் கம்பாலே |
பால் வடியும் கம்பாலே |
||
வரிசை 57: | வரிசை 61: | ||
பவளக்கால் தொட்டிலிலே<br> |
பவளக்கால் தொட்டிலிலே<br> |
||
பாலகனே நீயுறங்கு<br> |
பாலகனே நீயுறங்கு<br> |
||
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ<br> |
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ<br> |
||
சித்திரப் பூந்தொட்டிலிலே<br> |
சித்திரப் பூந்தொட்டிலிலே<br> |
||
வரிசை 70: | வரிசை 75: | ||
நிறைந்த தலை வாசலிலே<br> |
நிறைந்த தலை வாசலிலே<br> |
||
வந்து நிற்பான் உன் மாமன்<br> |
வந்து நிற்பான் உன் மாமன்<br> |
||
தொட்டிலிட்ட நல்லம்மாள்<br> |
தொட்டிலிட்ட நல்லம்மாள்<br> |
||
பட்டினியாப் போராண்டா<br> |
பட்டினியாப் போராண்டா<br> |
||
வரிசை 79: | வரிசை 85: | ||
பால் குடிக்கக் கிண்ணி, <br> |
பால் குடிக்கக் கிண்ணி, <br> |
||
பழந்திங்கச் சேணாடு<br> |
பழந்திங்கச் சேணாடு<br> |
||
நெய் குடிக்கக் கிண்ணி,<br> |
நெய் குடிக்கக் கிண்ணி,<br> |
||
முகம் பார்க்கக் கண்ணாடி<br> |
முகம் பார்க்கக் கண்ணாடி<br> |
||
கொண்டைக்குக் குப்பி<br> |
கொண்டைக்குக் குப்பி<br> |
||
கொண்டு வந்தான் தாய்மாமன். |
கொண்டு வந்தான் தாய்மாமன். |
||
வரிசை 90: | வரிசை 98: | ||
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு<br> |
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு<br> |
||
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு<br> |
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு<br> |
||
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்<br> |
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்<br> |
||
பல வர்ணச் சட்டைகளும்<br> |
பல வர்ணச் சட்டைகளும்<br> |
||
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு<br> |
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு<br> |
||
கட்டிக் கிடக் கொடுத்தானோ! <br> |
கட்டிக் கிடக் கொடுத்தானோ! <br> |
||
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு<br> |
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு<br> |
||
மின்னோலைப் புஸ்தகமும்<br> |
மின்னோலைப் புஸ்தகமும்<br> |
||
வரிசை 105: | வரிசை 115: | ||
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி<br> |
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி<br> |
||
விதம்விதமா அம்புட்டிச்சாம்,<br> |
விதம்விதமா அம்புட்டிச்சாம்,<br> |
||
அரண்மனைக்கு ஆயிரமாம்<br> |
அரண்மனைக்கு ஆயிரமாம்<br> |
||
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி<br> |
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி<br> |
||
அப்பன் விற்று வீடுவர<br> |
அப்பன் விற்று வீடுவர<br> |
||
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி<br> |
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி<br> |
||
ஆச்சரியப் பட்டார்களாம்,<br> |
ஆச்சரியப் பட்டார்களாம்,<br> |
||
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்<br> |
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்<br> |
||
பிரியமாக ஆறெடுத்தேன்<br> |
பிரியமாக ஆறெடுத்தேன்<br> |
||
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்<br> |
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்<br> |
||
ஆறு மீனை விற்றுப் போட்டேன். <br> |
ஆறு மீனை விற்றுப் போட்டேன். <br> |
||
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை<br> |
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை<br> |
||
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.<br> |
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.<br> |
||
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்<br> |
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்<br> |
||
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு<br> |
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு<br> |
||
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்<br> |
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்<br> |
||
அழகைப் பார்த்து அரண்டார்களே. <br> |
அழகைப் பார்த்து அரண்டார்களே. <br> |
||
அத்திமரம் குத்தகையாம்<br> |
அத்திமரம் குத்தகையாம்<br> |
||
ஐந்துலட்சம் சம்பளமாம்<br> |
ஐந்துலட்சம் சம்பளமாம்<br> |
||
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்<br> |
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்<br> |
14:59, 30 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.
தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.
தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போஜி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.
கொவ்வை இதழ் மகளே - என் குவிந்த நவரத்தினமே கட்டிப் பசும்பொன்னே - என் கண்மணியே கண் வளராய்
என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் செய்து வைப்போம் மாமன் அடித்தானோ மல்லி பூ செண்டாலே அண்ணன் அடித்தானோ ஆவாரங் கொம்பாலே பாட்டி அடித்தாளோ பால் வடியும் கம்பாலே ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு
அறிமுகம்
தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.
பாடல் 1
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே.
இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.
பாடல் 2
உசந்த தலைப்பாவோ
'உல்லாச வல்லவாட்டு'
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?
பாடல் 3
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.
பாடல் 4
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !
பாடல் 5
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.
பாடல் 6
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!