விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 5
Appearance
திசம்பர் 5: உலக மண் நாள், பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்
- 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
- 1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
- 1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் (படம்) பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
- 1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
- 1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
- 1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
- 1995 – ஈழப்போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
ஆறுமுக நாவலர் (இ. 1879) · கல்கி (இ. 1954) · ஜெயலலிதா (இ. 2016)
அண்மைய நாட்கள்: திசம்பர் 4 – திசம்பர் 6 – திசம்பர் 7