முப்தி முகமது சயீத்
முஃப்தி முகமது சயீது | |
---|---|
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 2 திசம்பர் 1989 – 10 நவம்பர் 1990 | |
பிரதமர் | வி. பி. சிங் |
முன்னவர் | சர்தார் பூடா சிங் |
பின்வந்தவர் | சந்திரசேகர் |
சம்மு காசுமீர் முதலமைச்சர் | |
பதவியில் நவம்பர் 2, 2002 – நவம்பர் 2, 2005 | |
முன்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்வந்தவர் | குலாம் நபி ஆசாத் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பிஜ்பெகரா, இந்தியா |
இறப்பு | சனவரி 7 , 2016 புதுதில்லி |
அரசியல் கட்சி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி (1999-நடப்பில்) |
பிற அரசியல் சார்புகள் |
இந்திய தேசிய காங்கிரசு (1991-1999; 1987க்கு முன்பு) ஜனதா தளம் (1987-1991) |
சமயம் | இசுலாம் |
முப்தி முகமது சயீத் (Mufti Mohammad Sayeed, காஷ்மீரி: मुफ़्ती मुहम्मद सईद (தேவநாகரி), مفتی محمد سید (நஸ்தலீகு)) ( சனவரி 12, 1936 - சனவரி 7 , 2016[1]) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சுத் திங்கள் முதல் தேதியில் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.காஷ்மீர் சிக்கலுக்கான தீர்வு காண்பதில் காஷ்மீர் மக்களுடன் நிபந்தனையற்ற உரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக சூலை 1999இல் ஜம்மு காஷ்மீர் மக்களின் சனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.[2]
அரசியல் வாழ்க்கை[தொகு]
முப்தி மொகமது சயீது அனந்தநாக்கில் பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். முப்தி மொகமது சயீது 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்தார்.பின்னர் வி.பி.சிங் தலைமையில் இருந்த கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். 1989 இல் இந்திய நடுவண் அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத் சில பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார். அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டில் தம் மகள் மெகபூபா முப்தியுடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் சனநாயகக் கட்சியைத் தொடங்கினார். பாரதிய சனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஜம்மு காஷ்மீரில் மாநில அரசின் முதல்வரானார்.
மறைவு[தொகு]
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜனவரி 7, 2016 அன்று தன் 79 வயதில் காலமானார்.[3][4] ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இவரின் மகள் மெகபூபா முப்தி பதவியேற்றார்.[5]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "http://indianexpress.com/article/india/india-news-india/mufti-mohammad-sayeed-dies-jammu-and-kashmir/". 7 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. External link in
|title=
(உதவி) - ↑ Mukhtar, Ahmad (சூலை 28, 1999). "Mufti floats new regional party in Kashmir". ரெடிப்.காம். http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm. பார்த்த நாள்: மார்ச் 5, 2009.
- ↑ "Mufti Mohammad Sayeed: India Kashmir leader dead". பிபிசி. 7 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mufti Mohammad Sayeed, Chief Minister Of Jammu And Kashmir, Dies At 79". என்டிடிவி. 7 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mehbooba Mufti Set To Be Jammu And Kashmir's First Woman Chief Minister". என்டிடிவி. 7 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.