தூய வளனார் கல்லூரி, திருச்சி
![]() | |
குறிக்கோளுரை | நன்மைக்கும் உண்மைக்கும் ! |
---|---|
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 1844 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.sjctni.edu |
தூய வளனார் கல்லூரி[1] (St. Joseph's College), இயேசு சபையினரால், திருச்சிராப்பள்ளியில் 1844 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது மற்றும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு, இந்திய அரசால் "சிறப்பு பாரம்பரிய நிதி" (Special Heritage Status) வழங்கப்பட்ட இந்தியாவின் பன்னிரண்டு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]தூய வளனார் கல்லூரி (புனித சூசையப்பர் கல்லூரி) திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலை, முதுகலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி 1982 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இக்கலூரி வளாகத்தில் அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகம் உள்ளது.
துறைகள்
[தொகு]- தமிழ்
- அரபி
- ஆங்கிலம்
- இந்தி
- உருது
- பிரெஞ்சு
- தாவரவியல்
- வேதியியல்
- வர்த்தகம்
- கணினி அறிவியல்
- பொருளியல்
- வரலாறு
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
- மின்னணுவியல்
மேலும் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
படித்த பிரபலங்கள்
[தொகு]பெயர் | துறை |
---|---|
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், | விஞ்ஞானி - முன்னாள் ஜனாதிபதி |
கு. கோதண்டபாணி பிள்ளை | தமிழறிஞர் - எழுத்தாளர் |
அ. சீனிவாச ராகவன் | எழுத்தாளர் |
சாண்டில்யன் | எழுத்தாளர் |
அசோக் குமார் | நீதிபதி |
சுஜாதா | எழுத்தாளர் |
பிரபு சாலமன் | திரைப்பட இயக்குநர் |
கோ. நா. இராமச்சந்திரன் | விஞ்ஞானி |
எஸ். ஏ. அசோகன் | திரைப்பட நடிகர் - தயாரிப்பாளர் |
சி. பா. ஆதித்தனார் | தினத்தந்தி நிறுவனர் |
சிறீரங்கம் கண்ணன் | மோர்சிங் கலைஞர் |
அ. சீனிவாச ராகவன் | எழுத்தாளர் |
ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் | திருவிதாங்கூர்-கொச்சி இராச்சியத்தின் முதலமைச்சர் - சென்னை மாகாண ஆளுநர் |
ராமச்சந்திர தீட்சிதர் | தொல்லியல் பேராசிரியர் - எழுத்தாளர் |
துரைசாமி நெப்போலியன் | திரைப்பட நடிகர் - முன்னாள் மத்திய சமூகநீதி இணையமைச்சர். |
என். கோபாலசுவாமி | முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் |
ரா.ச.கிருஷ்ணன் | விஞ்ஞானி |
அரு. இலக்சுமணன் | உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி |
வசந்த் | திரைப்பட இயக்குனர் |
வரலாற்று மைல் கற்கள்
[தொகு]வருடம் | நிகழ்வு |
---|---|
1844 | நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது |
1866 | சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றது |
1883 | திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது |
1885 | புனித லூர்து அன்னை ஆலய அர்ச்சிப்பு |
1896 | அரை தங்கி, விடுதிகள் |
1907 | பிரசித்தி பெற்ற லாலி அரங்கம் கட்டப்பட்டது |
1945 | கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் |
1973 | மாலை நேரக் கல்லூரி ஆரம்பம் |
1978 | தன்னாட்சி பெற்றது |
1982 | பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது |
1986 | ஷெப்பர்ட் துவக்கம் |
1994 | வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்புக்கள் |
1995 | நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா |
2000 | தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக் கழகத்தால் ஐந்து நட்சத்திர தரம் பெற்றது |
2001 | தேர்வு அடிப்படையிலான மதிப்பு அமைப்பு (Choice-based credit system) |
2003 | தன்னாட்சி பெற்றதன் வெள்ளி விழா |
2004 | "சிறப்புக்கான திறனுடைய கல்லூரி" (Made "College with Potential for Excellence") |
2006 | தேசிய 'A+ கிரேடு' அங்கீகாரம் (Nationally re-accredited with A+ Grade) |
வெளியிணைப்புகள்
[தொகு]- ↑ "தூய வளனார் கல்லூரி". Retrieved 2025-05-26.