உள்ளடக்கத்துக்குச் செல்

நளினி பாலா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நளினி பாலா தேவி
பிறப்பு23 மார்ச் 1898
பார்பேட்டா
இறப்பு24 திசம்பர் 1977 (அகவை 79)
பணிகவிஞர்
விருதுகள்Sahitya Akademi Award in Assamese

நளினி பாலா தேவி (23 மார்ச் 1898– 24 திசம்பர் 1977) பிரபல இந்திய எழுத்தாளரும், அசாமி இலக்கியத்தின் கவிஞரும் ஆவார்.[1] தேசிய மற்றும் மாயக் கவிதைகளுக்குப் பெயர் பெற்றவர்.[2] இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக 1957 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. மேலும் 1968 ஆம் ஆண்டில் “அலகானந்தா” என்ற தனது கவிதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை வென்றார்.

ஆரம்பகால வாழ்க்கை, தொழில்

[தொகு]

நளினி பாலா தேவி 1898, அசாமில் குவகாத்தியில் பிறந்தார். இவருடைய தந்தை கர்மவீர் நபின் சந்திர பர்தோலாய் (1875-1936), ஒரு பிரபல அசாமிய இந்திய சுதந்திர இயக்க ஆர்வலரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். நளினி பாலா தேவி தனது முதல் கவிதையான பிட்டாவை 10 வயதில் எழுதினார். 12 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரின் கணவர் ஜீஷ்வர் சாங்ககோட்டி 19 வயதாக இருந்தபோது இறந்துவிட்டார். தனது இரண்டு மகன்களையும் தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இழந்தார். வாழ்க்கையில் நடந்த இந்த துன்பகரமான சம்பவங்களிலிர்நுது மீண்டுவர கவிதைகள் எழுதத் தொடங்கினார். உணர்ச்சி, சோகம், தேசபக்தி மற்றும் பக்தி ஆகியவற்றை மைய கருப்பொருளாகக் கொண்டு இவர் எழுதியவை அசாமி இலக்கியங்களில் இன்றும் பாராட்டப்படுகின்றன.[3][4]

1928 இல் வெளியிடப்பட்ட முதல் கவிதை புத்தகம் சந்தியார் சுர் (ஈவினிங் மெலடி) என்பதாகும்.[5] பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் குவஹாத்தி பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இதனை முறையே 1946 மற்றும் 1951 ஆம் ஆண்டுகளில் ஒரு பாடப்புத்தகமாக ஏற்றுக்கொண்டது.

படைப்புகள்

[தொகு]

நளினியின் மற்ற படைப்புகளில் அலகானந்தா, சோபுனார் சுர் (கனவுகளின் மெலடி), போரோஷ் மோனி, யுகா தேவதா (கதாநாயகனின் வயது), ஷேஷ் பூஜா (கடைசி வழிபாடு), பரிஜேட்டர் அபிஷேக், பிரஹ்லாத், மேகதட், சுரவி, ரூப்ரேகா, சாந்திபாத் (கட்டுரைத் தொகுப்பு), மற்றும் ஷேஷோர் சுர் (கடைசி மெலடி) என்பனவாகும்.[4][5]

ஸ்மிருதிர் தீர்த்தா (இவரின் தந்தையின் வாழ்க்கை வரலாறு), பிஸ்வதீபா (பிரபல பெண்களின் சுயசரிதைகளின் தொகுப்பு), எரி ஓஹா தின்பூர் (நாட்கள் கடந்து, சுயசரிதை), சர்தார் வல்லவபாய் படேல் போன்றவை இவரது வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகள் ஆகும்.[6]

1950 ஆம் ஆண்டில், இவர் சடோ அசோம் பரிஜத் கானனை நிறுவினார். பின்னர் அது அசாமில் குழந்தைகள் அமைப்பான மொய்னா பாரிஜத் என்று பிரபலமானது. மீராபாய் என்ற ஒரு நாடகத்தையும் எழுதினார்.

நூற்பட்டியல்

[தொகு]
  • சந்தியார் சுர் (ஈவினிங் மெலடி, 1928)
  • சோப்புனர் சுர் (மெலடி ஆஃப் ட்ரீம்ஸ், 1943)
  • ஸ்மிருதி தீர்த்த (சுயசரிதை, 1948)
  • பரோஷ்மோனி (டச்ஸ்டோன், 1954)
  • ஜக்ரிதி (விழிப்பு, 1962)
  • அலகானந்தா (1967) [4]
குவகாத்தியின் பால்டன் கடைவீதியில் சிலை

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

[தொகு]

இறப்பு

[தொகு]

நளினி பாலா தேவி 1977 டிசம்பர் 24, அன்று இறந்தார். இவரது புகழ்பெற்ற கவிதை நாட்கர் (தி தியேட்டர்) இன் கடைசி நான்கு வரிகளால் அசாமி இலக்கியத்தில் நினைவுகூரப்படுகிறது.

மேலும் படிக்க

[தொகு]
  • Das, Sisir Kumar (1995). History of Indian Literature: 1911–1956: struggle for freedom: triumph and tragedy, Vol. 2. சாகித்திய அகாதமி. ISBN 978-81-7201-798-9.
  • Nalini Natarajan; Emmanuel Sampath Nelson (1996). Handbook of Twentieth-Century Literatures of India. Greenwood Publishing Group. ISBN 0313287783.
  • Preeti Barua (2000). Nalinibala Devi. Sahitya Akademi. ISBN 8126009160.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_பாலா_தேவி&oldid=4597169" இலிருந்து மீள்விக்கப்பட்டது