நளினி பாலா தேவி
| நளினி பாலா தேவி | |
|---|---|
| பிறப்பு | 23 மார்ச் 1898 பார்பேட்டா |
| இறப்பு | 24 திசம்பர் 1977 (அகவை 79) |
| பணி | கவிஞர் |
| விருதுகள் | Sahitya Akademi Award in Assamese |
நளினி பாலா தேவி (23 மார்ச் 1898– 24 திசம்பர் 1977) பிரபல இந்திய எழுத்தாளரும், அசாமி இலக்கியத்தின் கவிஞரும் ஆவார்.[1] தேசிய மற்றும் மாயக் கவிதைகளுக்குப் பெயர் பெற்றவர்.[2] இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக 1957 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. மேலும் 1968 ஆம் ஆண்டில் “அலகானந்தா” என்ற தனது கவிதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை வென்றார்.
ஆரம்பகால வாழ்க்கை, தொழில்
[தொகு]நளினி பாலா தேவி 1898, அசாமில் குவகாத்தியில் பிறந்தார். இவருடைய தந்தை கர்மவீர் நபின் சந்திர பர்தோலாய் (1875-1936), ஒரு பிரபல அசாமிய இந்திய சுதந்திர இயக்க ஆர்வலரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். நளினி பாலா தேவி தனது முதல் கவிதையான பிட்டாவை 10 வயதில் எழுதினார். 12 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரின் கணவர் ஜீஷ்வர் சாங்ககோட்டி 19 வயதாக இருந்தபோது இறந்துவிட்டார். தனது இரண்டு மகன்களையும் தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இழந்தார். வாழ்க்கையில் நடந்த இந்த துன்பகரமான சம்பவங்களிலிர்நுது மீண்டுவர கவிதைகள் எழுதத் தொடங்கினார். உணர்ச்சி, சோகம், தேசபக்தி மற்றும் பக்தி ஆகியவற்றை மைய கருப்பொருளாகக் கொண்டு இவர் எழுதியவை அசாமி இலக்கியங்களில் இன்றும் பாராட்டப்படுகின்றன.[3][4]
1928 இல் வெளியிடப்பட்ட முதல் கவிதை புத்தகம் சந்தியார் சுர் (ஈவினிங் மெலடி) என்பதாகும்.[5] பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் குவஹாத்தி பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இதனை முறையே 1946 மற்றும் 1951 ஆம் ஆண்டுகளில் ஒரு பாடப்புத்தகமாக ஏற்றுக்கொண்டது.
படைப்புகள்
[தொகு]நளினியின் மற்ற படைப்புகளில் அலகானந்தா, சோபுனார் சுர் (கனவுகளின் மெலடி), போரோஷ் மோனி, யுகா தேவதா (கதாநாயகனின் வயது), ஷேஷ் பூஜா (கடைசி வழிபாடு), பரிஜேட்டர் அபிஷேக், பிரஹ்லாத், மேகதட், சுரவி, ரூப்ரேகா, சாந்திபாத் (கட்டுரைத் தொகுப்பு), மற்றும் ஷேஷோர் சுர் (கடைசி மெலடி) என்பனவாகும்.[4][5]
ஸ்மிருதிர் தீர்த்தா (இவரின் தந்தையின் வாழ்க்கை வரலாறு), பிஸ்வதீபா (பிரபல பெண்களின் சுயசரிதைகளின் தொகுப்பு), எரி ஓஹா தின்பூர் (நாட்கள் கடந்து, சுயசரிதை), சர்தார் வல்லவபாய் படேல் போன்றவை இவரது வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகள் ஆகும்.[6]
1950 ஆம் ஆண்டில், இவர் சடோ அசோம் பரிஜத் கானனை நிறுவினார். பின்னர் அது அசாமில் குழந்தைகள் அமைப்பான மொய்னா பாரிஜத் என்று பிரபலமானது. மீராபாய் என்ற ஒரு நாடகத்தையும் எழுதினார்.
நூற்பட்டியல்
[தொகு]- சந்தியார் சுர் (ஈவினிங் மெலடி, 1928)
- சோப்புனர் சுர் (மெலடி ஆஃப் ட்ரீம்ஸ், 1943)
- ஸ்மிருதி தீர்த்த (சுயசரிதை, 1948)
- பரோஷ்மோனி (டச்ஸ்டோன், 1954)
- ஜக்ரிதி (விழிப்பு, 1962)
- அலகானந்தா (1967) [4]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]- 1968 ஆம் ஆண்டு- அலகானந்தா என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[7]
- 1957 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மசிறீ வழங்கப்பட்டது.[8]
- 1955 இல் அசாம் இலக்கிய மன்றத்தின் 23 வது ஜோர்ஹாட் அமர்வின் தலைவராக இருந்தார்.[9]
- குவகாத்தியின் காட்டன் கல்லூரி 1986 ஆம் ஆண்டில் தனது பெண்கள் விடுதிக்கு 'பத்மசிறீ நளினி பாலா தேவி பெண்கள் விடுதி 'என்று பெயரிட்டது.[10]
இறப்பு
[தொகு]நளினி பாலா தேவி 1977 டிசம்பர் 24, அன்று இறந்தார். இவரது புகழ்பெற்ற கவிதை நாட்கர் (தி தியேட்டர்) இன் கடைசி நான்கு வரிகளால் அசாமி இலக்கியத்தில் நினைவுகூரப்படுகிறது.
மேலும் படிக்க
[தொகு]- Das, Sisir Kumar (1995). History of Indian Literature: 1911–1956: struggle for freedom: triumph and tragedy, Vol. 2. சாகித்திய அகாதமி. ISBN 978-81-7201-798-9.
- Nalini Natarajan; Emmanuel Sampath Nelson (1996). Handbook of Twentieth-Century Literatures of India. Greenwood Publishing Group. ISBN 0313287783.
- Preeti Barua (2000). Nalinibala Devi. Sahitya Akademi. ISBN 8126009160.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "An author & a trailblazer personality". The Telegraph. 9 February 2004. http://www.telegraphindia.com/1040209/asp/northeast/story_2872795.asp. பார்த்த நாள்: 18 September 2012.
- ↑ Das, p. 197
- ↑ "Nalinibala Devi remembered". Assam Tribune. 1 January 2009 இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130117184444/http://www.assamtribune.com/scripts/details.asp?id=jan0109/State6. பார்த்த நாள்: 18 September 2012.
- 1 2 3 Natrajan, p. 31
- 1 2 Barua, p. 15
- ↑ Barua, p. 20
- ↑ "Sahitya Akademi Award year wise". Official listings, சாகித்திய அகாதமி website.
- ↑ "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
- ↑ Presidents of Asam Sahitya Sabha since 1917 பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம் Asam_Sahitya_Sabha website.
- ↑ Padmashree Nalini Bala Devi Girls’ Hostel பரணிடப்பட்டது 2021-07-13 at the வந்தவழி இயந்திரம் Cotton College, Guwahati