திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில் | |
---|---|
[[படிமம்:|frameless|alt=]] | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஆடானை |
பெயர்: | திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாடானை |
மாவட்டம்: | ராமநாதபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் |
தாயார்: | சினேகவல்லி, அம்பாயி அம்மை |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | சூரிய புஷ்கரிணி |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி. |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | மீள் கட்டுமானம் - நாட்டுக்கோட்டை நகரத்தார் |
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது. [1] இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர்.
இறைவன், இறைவி[தொகு]
இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரிணியும் உள்ளன.
நம்பிக்கை[தொகு]
இத்தலத்தில் வருணன் மகன் வாருணி துருவாச முனிவரின் சாபத்தினால் ஆனை உடலும் ஆட்டுத்தலையுமாய் இருந்து வழிபட்டு விமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.
விழாக்கள்[தொகு]
இக்கோயிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[1]
திருப்பணிகள்[தொகு]
இக்கோயில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நாயக்கர்கள் கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது உள்ள கோயில் 19ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் தலைமையில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 அருள்மிகு ஆதிரத்தினேரீஸ்வரர் கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. பக். 245,246.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்
- ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் வலைதளம் படங்களுடன்
- கோவில் பற்றிய விபரமும் பதிகமும்
திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 9 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 200 |