சிறீ மூலம் பிரபல சட்டசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1888 ஆகத்து 23 அன்று நடைபெற்ற திருவிதாங்கூர் சட்டமன்ற சபைக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் தீர்மான விவரம்: உள்ளூர் வருவாயின் நிலுவைத் தொகையை மீட்பது, குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஜென்மிகளுக்கும் அவர்களது குத்தகைதாரர்களுக்கும் இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட முன்வடிவு சபையால் விவாதிக்கப்பட்டது. [1].

சிறீ மூலம் பிரபல சட்டசபை (Sree Moolam Popular Assembly) என்பது கேரளாவின் திருவிதாங்கூர் மாநிலத்தில் இருந்த இந்திய வரலாற்றில் பிரபலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றமாகும்.

இதன் முன்னோடி சட்டமன்ற சபை திருவிதாங்கூரில் 1888 இல் எட்டு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. 1886 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மகாராஜாவாக மாறிய மூலம் திருநாள் ராமவர்மா, 1888 மார்ச் 30 இல் இதை நிறுவினார். 1898 ஆம் ஆண்டில், சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்த்தப்பட்டது. இதில் ஒன்பது பேர் அதிகாரிகளாகவும், ஆறு பேர் அதிகாரிகள் அல்லாதவர்களாகவும் இருந்தனர்.

அமைப்பு[தொகு]

1904 ஆம் ஆண்டில், சிறீ மூலம் பிரபல சட்டமன்றம் (உள்ளூர் மொழியில் சிறீ மூலம் பிரஜா சபை என்று அழைக்கப்படுகிறது) என்று அழைக்கப்படும் கீழவை 88 உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. நிர்வாகத்தில் மக்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதாக இருந்தது. [2] நில உரிமையாளர்களும் வணிகர்களின் பிரதிநிதிகளும் மட்டுமே இதன் உறுப்பினர்களாக இருந்தனர். இது சட்டமன்றம் அல்ல என்றாலும், மக்களுக்கு அவர்களின் தேவைகள், விருப்பங்கள் அல்லது குறைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும், அரசாங்கக் கொள்கைகளை, நடவடிக்கைகளை மக்களுக்கு நன்கு தெரியப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் இரண்டு பேர், ஆண்டு நில வருவாய் ரூ. நூறுக்கு குறையாத நில உரிமையாளர்களிடமிருந்து மாவட்டத் தலைவர்களாலும், நிகர ஆண்டு வருமானம் ரூ.6000 அல்லது அதற்கு மேலே இருக்கும் நில உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கும் முறை[தொகு]

1905 ஆம் ஆண்டில், மூலம் பிரபலமான சட்டமன்றம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியது. 100 உறுப்பினர்களில், 77 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 23 பேர் பரிந்துரைக்கப்பட வேண்டும். வாக்களிக்கும் உரிமை ஆண்டு வருமானம் ஐம்பது ரூபாய்க்கு குறையாத அல்லது நிகர வருமானம் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறையாத நபர்களுக்கு மட்டுமே இருந்தது. பத்து வருடங்களுக்கும் குறையாத பல்கலைக்கழக பட்டதாரிகளும், அந்தந்த வட்டத்தில் தங்கியிருப்பதும் வாக்களிக்க தகுதியாகும்.

1907 ஆம் ஆண்டில், சட்டமன்றம் மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியது. மேல் சபையில் 15 உறுப்பினர்கள்-ஒன்பது அதிகாரிகள், ஆறு அதிகாரிகள் அல்லாதவர்கள் இருந்தனர். 1919 ஆம் ஆண்டில், இந்த அமைப்பு அதன் பலத்தை 25 ஆக உயர்த்தியது. அதில் எட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அக்டோபர் 1921 இல், சபையின் மொத்த பலம் மேலும் 50 ஆக உயர்த்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.

இருசபை அமைப்பு[தொகு]

நில உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் சம்பந்தப்பட்ட திருவிதாங்கூர் ஸ்ரீ மூலம் பிரபல சட்டமன்றத்தை நிறுவுவதற்காக 1904 அக்டோபர் 1 ஆம் தேதி திவான் பிறப்பித்த உத்தரவு

1932 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் சட்டமன்றம் மற்றும் சிறீ மூலம் பிரபல சட்டமன்றம் ஒரு மேல் சபையை உள்ளடக்கிய முறையான இருசபை அமைப்பாக மாற்றப்பட்டன. திருவிதாங்கூர் சிறீ சித்ரை மாநில சட்டமன்றம் மற்றும் ஒரு கீழ்வை சிறீ மூலம் சட்டமன்றம் ஆகியவற்றைக் கொண்ட முறையான மாற்றப்பட்டன. 1947 செப்டம்பர் வரை இந்த இருசபை அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இது ஒரு தொகுதி சட்டசபைக்கு வழிவகுத்தது. பின்னர் இது கொச்சின் மாநிலத்தின் இணைப்பிற்கும் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுடன் இணைவதற்கும் வழிவகுத்தது.

உறுப்பினர்கள்[தொகு]

சிறீ மூலம் பிரபல சட்டமன்ற உறுப்பினர்களில்:

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_மூலம்_பிரபல_சட்டசபை&oldid=3006766" இலிருந்து மீள்விக்கப்பட்டது