ஊரளி அப்பூப்பன் காவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயிலில் பக்தர்கள்

ஊரளி அப்பூப்பன் காவு இந்தியாவின் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கல்லெலி என்ற இடத்தில் அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும்.[1] இக்கோயில் கல்லேலி – அச்சன்கோவில் காட்டுப் பாதையில் பத்தனம்திட்டா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், கொன்னியிலிருந்து9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் மலைக் கடவுள்களின் அதிபதியாகக் கருதப்படுகிறார். [2] கோயிலின் முக்கிய திருவிழாவான பதயமுதயம், மலையாள நாட்காட்டியில் மேடம் மாதத்தில் விஷு அன்று தொடங்குகிறது. [1]

பாரம்பரியம்[தொகு]

இந்தக் கோயில் ஆரம்பகால திராவிட–நாகா பழங்குடியினரின் மரபுகளையும், சடங்குகளையும் கடைபிடிக்கிறது. அந்த நடைமுறையானது வழக்கமான இந்து கோயில்களில் நடைபெறுகின்ற பாரம்பரிய தாந்த்ரீக நடைமுறைகளிலிருந்தும், பூசைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாகும்.[3]

தெய்வங்கள்[தொகு]

கோயிலின் மூலவர் ஊரளி அப்பூப்பன் (கல்லேளி அப்பூப்பன்), ஊரளி அமூமம்மா ஆவார். [4] அப்பூப்பன் 999 மலைக்கடவுளர்களின் தலைவராகவும், அம்மூம்மா அவரது தாயாகவும் கருதப்படுகின்றனர். [1]

இக்கோயிலில் வடக்கேஞ்சேரி வல்யச்சன், விநாயகர், பராசக்தி, யட்சியம்மா, நாகராஜா, நாகயட்சி, ராட்சசு, குட்டிச்சாத்தன், கொச்சுக்குஞ்சு அருகலா, பாரத பூங்குறவன், பாரத பூங்குரத்தி, ஹரிநாராயண தம்புரான் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன. [1][4]

திருவிழாக்கள்[தொகு]

இக்கோயிலின் முக்கிய திருவிழாவான பதமுடைய விழா மலையாள மாதமான மேடத்தில் (ஏப்ரல் – மே) விஷு அன்று தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது. [4] 10ஆம் நாளில் (விசுக்குப் பிறகு 10வது சூரிய உதயம்) ஆதித்யா பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பூசைகள், சடங்குகளுடன் முடிவடைகிறது.[1] மற்றொரு சிறப்பு நிகழ்வான மண்டல மகரவிளக்கு திருவிழா மலையாள மாதமான விருட்சிகம் முதல் மகரம் வரை (நவம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை) நடைபெறுகிறது.[5]

சடங்குகள்[தொகு]

கர்கிடக வாவு பலி என்பது மலையாள மாதமான காக்கிடகத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கோயிலில் செய்யப்படுகின்ற முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். பிற சடங்குகளான ஆனையூட்டு, வானரவூட்டு, மீனூட்டு என்ற ஆனைகளுக்கும், வானரங்களுக்கும், மீன்களுக்கும் உணவு வழங்குகின்ற சடங்குகள் ஆகியவையும் இங்கு நிகழ்த்தப்பெறுகின்றன. [2] திராவிட– நாகப் பழங்குடியினரின் பாரம்பரிய கலைகளான கும்பப்பாட்டு, பரதக்காளி, தலையாட்டும் காளி, வெள்ளங்கும் நெய்வேத்யம், ஆழி பூசை, கள்ளெலி விளக்கு போன்றவை இக்கோயிலின் சிறப்பம்சங்களாகும். [6] படையணி, முடி-ஆட்டம் போன்ற சடங்குகளும் சில சமயங்களில் நிகழ்த்தப்பெறுகின்றன.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Thomas, Isson (29 July 2022). "Kallely Oorali Appooppan Kavu: A mystic world in Nature's lap". Onmanorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
  2. 2.0 2.1 Srivatsa, Indira (2022) (in en). A to Z India - Magazine: August 2021. BookRix. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783748789871. 
  3. Sudhish, Navamy (17 April 2017). "Here's where the tribal rhythm goes wild". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
  4. 4.0 4.1 4.2 Thomas (29 July 2022). "കല്ലേലിക്കാവിലെ ഊരാളിയപ്പൂപ്പൻ ; 24 മണിക്കൂറും പ്രാർഥനയുടെ വാതിലുകൾ തുറന്നിട്ടിരിക്കുന്നു ഈ കാനനക്ഷേത്രം". {{cite web}}: Missing or empty |url= (help)
  5. Daily, Keralakaumudi (12 November 2019). "കല്ലേലി കാവിൽ മണ്ഡല മകരവിളക്ക് വിളക്ക് മഹോത്സവം". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
  6. "Sree Kallely Oorali Appooppan Kavu". www.sreekallelyooraliappooppankavu.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரளி_அப்பூப்பன்_காவு&oldid=3833286" இலிருந்து மீள்விக்கப்பட்டது