ஆவனவஞ்சேரி இண்டிலயப்பன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவனவஞ்சேரி இண்டிலயப்பன் கோயில்

ஆவனவஞ்சேரி இண்டிலயப்பன் கோயில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அட்டிங்கலில் உள்ள ஒரு பபுகழ்பெற்ற இந்துக் கோயிலாகும். [1] இந்தக் கோயில் கேரள மாநிலத்தில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். நல்ல ஆரோக்கியம், தைரியம் மற்றும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகளைப் பெற வேண்டி பக்தர்களால் இவர் வழிபடப்படுகிறார். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சிவன் மற்றும் உமாமகேஸ்வரர் ஆவர். இக்கோலில் "உண்ணி கணபதி" (குழந்தை விநாயகர் , தர்மசாஸ்தா (ஐயப்பன்) மற்றும் நாக தேவதைகள் ஆகியோர் துணைத்தெய்வங்களாக உள்ளனர். மல்லன் தம்புரானுக்கு இங்கு தனியாக ஒரு சன்னதி உள்ளது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கேரளாவின் அட்டிங்கலில் இருந்து  அட்டிங்கல் நகர மையத்தின்தென் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது டவுன் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்தில் இருந்து இங்கு ஆட்டோக்கள்மூலம் கோயிலுக்கு வரலாம். அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையம் வர்கலா சிவகிரி ஆகும். (16 கிமீ) அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் ஆகும். (30 கிமீ)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]