ஆசிய பசிபிக் தென்னை சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (Asian and Pacific Coconut Community) என்பது தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியா பசிபிக் நாடுகளில் உள்ள அரசுகளுக்கு இடையேயான சர்வதேச நிறுவனமாகும். ஆசிய பசிபிக் தென்னை சமூகம் நோக்கம் "தென்னை மரத் தொழில்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஒத்திசைத்தல்" ஆகும்.[1]

1968ஆம் ஆண்டு திசம்பர் 12ஆம் தேதி பேங்காக்கில், ஆசியத் தென்னை சமூகத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஆசியத் தென்னை சமூகம் 9 செப்டம்பர் 1969 அன்று ஜகார்த்தாவை தலைமையிடமாகக் கொண்டு நடைமுறைக்கு வந்தது. ஆசியாவிற்கு வெளியே உள்ள நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்த போது, இதன் பெயர் "ஆசிய பசிபிக் தென்னை சமூகம்" என மாற்றப்பட்டது.

ஆசிய பசிபிக் தென்னை சமூகத்தின் உறுப்பு நாடுகள் உலகின் தேங்காய் உற்பத்தி மற்றும் தேங்காய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. ஆசிய பசிபிக் தென்னை சமூகத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் இணைந்த தேதிகள் பின்வருமாறு (நட்சத்திரம் அடையாளம் 1968 ஒப்பந்தத்தை அங்கீகரித்தது என்பதைக் குறிக்கிறது):

நிர்வாக இயக்குநர்கள்[தொகு]

  1. திரு. ஜி. பி. ரேயசு (1969–85)
  2. திரு. பி. ஜி. புஞ்சிகோவா (1985–2000)
  3. திரு. நோர்பெர்டோ போசெட்டா (2000–01)
  4. முனைவர் பி. ரெத்தினம் (2002–05)
  5. திரு. ரோமுலோ என். அரன்கான், இளையோர் (2006–13)
  6. திரு. உரோன் என். சாலும் (2013–)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]