பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

மயிலாடுதுறை-கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் பாவட்டக்குடி அடுத்து உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ஆதிலிங்கேசுவரர் என்றும் அகிலாண்டேசுவரி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

வாயிலை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. இடது புலம் இறைவி சன்னதி உள்ளது. வெளி வாயிலில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009