கோயிற்குளம் எழுமேசுவரமுடையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயிற்குளம் எழுமேசுவரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

வேதாரண்யம் வட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் ஆயக்காரன்புலத்தை அடுத்து பஞ்சநதிக்குளம் 4ஆவது சேத்தி என விசாரித்து கோயிலை அடையலாம்.

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் எழுமேசுவரமுடையார் ஆவார். இறைவி பாலினும் நன்மொழியாள் ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் ஆதி விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரியன், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009