ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் மணல்மேட்டினை அடுத்து, பந்தநல்லூர் சாலையில் திரும்பி கேசிங்கன் என்னும் ஊருக்கு அருகில் வலது புறத்தில் ஆத்தூர் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மந்தாரவனேசுவரர் என்றும் சொர்ணபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி அஞ்சனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். [1]

சிறப்பு[தொகு]

நந்தி பூசித்த, தவளை முத்தி பெற்ற தலம் என்ற பெருமைகளை உடையது. மந்தார வனம் என்பதே மந்தாரம் ஆயிற்று என்பர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009