செம்பங்குடி ருத்ரகோடீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பங்குடி ருத்ரகோடீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ருத்ரகோடீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

கோயில் வெட்ட வெளியில் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், இறைவி சன்னதிகள் உள்ளன. [1]

அருகிலுள்ள கோயில்[தொகு]

அருகில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. அங்குள்ள இறைவன் நாகநாதர், இறைவி கற்பூரவல்லி. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009