குமரகிரி தண்டாயுதபாணி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம் மாவட்டம்
அமைவு:குமரகிரி, சேலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:தண்டாயுதபாணி, முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்

குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில் சேலம் அம்மாப்பேட்டை அடுத்த குமரகிரி என்னும் மலை மேல் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இக்கோவில் செங்குந்த கைக்கோளர் வகுப்பைச் சார்ந்த சன்னியாசி கருப்பண்ணசுவாமி முதலியார் என்பவரால் கட்டப்பட்டது.[1]

திருவிழா[தொகு]

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.

திறக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

நேர்த்திக்கடன்[தொகு]

வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு திருமுழுக்கு செய்தும், புது ஆடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]