வசந்தம் பண்பலை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி ref |
சி correction |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ |
{{Refimprove}} |
||
{{Infobox radio station |
{{Infobox radio station |
||
|name = வசந்தம் எஃப்.எம்<br/>Vasantham FM |
|name = வசந்தம் எஃப்.எம்<br/>Vasantham FM |
10:00, 4 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
உரிமமுள்ள நகரம் | கொழும்பு, இலங்கை |
---|---|
ஒலிபரப்புப் பகுதி | இலங்கை |
குறிக்கோளுரை | "தமிழின் சுவாசம்" |
அதிர்வெண் | இலங்கை முழுவதும் 102.6 / 102.8 MHz |
முதல் ஒலிபரப்பு | 21 ஏப்ரல் 2008 |
வானொலி முறை | பண்பலை, இணையவழி |
மொழி | தமிழ் |
உரிமையாளர் | சுயாதீன ஊடக வலையமைப்பு |
இணை நிலையங்கள் | ஐரிஎன் எஃப்.எம் ஐரிஎன் நியூஸ் |
இணையதளம் | vasanthamfm.lk |
வசந்தம் எஃப்.எம் (Vasantham FM) இலங்கையில் பண்பலையில் இயங்கும் தமிழ் வானொலி நிலையம் ஆகும். "தமிழின் சுவாசம்" எனும் மகுட வாசகத்தோடு 2008 ஏப்பிரல் மாதம் 21 ஆம் நாளில் இருந்து இலங்கை அரசின் கீழ் இயங்கும் சுயாதீன ஊடக வலையமைப்பின் (ITN) ஊடாக ஒலிபரப்பாகி வருகிறது.[1]
வரலாறு[தொகு]
வசந்தம் வானொலி ஆரம்பத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாக 97.6 பண்பலைவரிசையில் தனது சேவையை ஆரம்பித்தது. பின்னர் 97.3 எனும் பண்பலைவரிசை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் ஒலிபரப்பாகி, இலங்கை முழுவதற்குமான சேவையை நடத்தியது. பின்னர் 2011 இல் 102.6, 102.8 ஆகிய பண்பலை வரிசைகளில் இலங்கை எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. இதனை விட இணையத்தின் ஊடாகவும் ஒலிபரப்பாகி வருகிறது.
வானொலி இசை நாடகம்[தொகு]
வசந்தம் வானொலி 2016 இல் புதிய இசை நாடக தொடரினை ஆரம்பித்தது. முதலில் 2016 இல் 'இராவண காவியம்' எனும் நாடகத்தை ஒலிபரப்பினார்கள். இந்த நாடகத்தில் கதாபாத்திரங்கள் பேசுவதை விட இசை அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. வசந்தம் வானொலியில் ஒலிபரப்பாகிய அனைத்து வானொலி இசை நாடகங்களையும் பரமசிவம் டார்வின் தயாரித்து நெறியாள்கை செய்திருந்தார்.
ஆண்டு | நாடகத்தின் பெயர் | குறிப்பு |
---|---|---|
2016 | இராவண காவியம் | இராவணனுக்கு பிறந்த மகள் சீதை எனும் கருப்பொருளில் உருவாக்கப்பட்ட நாடகம் |
2018 | உடைந்த நிலா | வரலாறுகளில் தோல்வி அடைந்த காதல் காவியங்கள் - பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய நூலின் தழுவல் |
2019 | துரியோதன சரித்திரம் | துரியோதனனின் கதை |
2020 | நள தமயந்தி | எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு புதினத்தின் தழுவல் |