எல். ஆர். ஈசுவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
துவக்கம் |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox musical artist |
|||
⚫ | |||
| name = எல். ஆர். ஈஸ்வரி |
|||
| Img = |
|||
| Img_capt = |
|||
| Img_size = |
|||
| Background = தனிப்பாடகர் |
|||
| Birth_name = |
|||
| Alias = |
|||
| birth_place = |
|||
| Born = {{Birth date and age|df=yes|1939|12|7}}<br>[[சென்னை]], [[தமிழ்நாடு]] |
|||
| death_date = |
|||
| instrument = |
|||
| Notable_awards = [[கலைமாமணி]] |
|||
| Genre = பின்னணிப் பாடகி |
|||
| Occupation = பாடகர் |
|||
| Years_active = 1950கள்-இன்று |
|||
}} |
|||
⚫ | |||
==வாழ்க்கைச் சுருக்கம்== |
==வாழ்க்கைச் சுருக்கம்== |
||
[[பரமக்குடி]]க்கு அருகே [[இளையான்குடி]] என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு [[சென்னை]]யில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி". [[எழும்பூர்|எழும்பூரில்]] உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) தந்தை இற்ந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற இவருக்கு தங்கையும் உண்டு. |
|||
==திரையுலகில்== |
==திரையுலகில்== |
||
வரிசை 16: | வரிசை 33: | ||
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]] |
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]] |
||
[[பகுப்பு:1939 பிறப்புகள்]] |
|||
[[en:L. R. Eswari]] |
12:18, 28 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
எல். ஆர். ஈஸ்வரி | |
---|---|
பிறப்பு | 7 திசம்பர் 1939 சென்னை, தமிழ்நாடு |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 1950கள்-இன்று |
எல். ஆர். ஈஸ்வரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி". எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) தந்தை இற்ந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற இவருக்கு தங்கையும் உண்டு.
திரையுலகில்
மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். இப்படத்தில் ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார். 1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயென் தோழி என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", முத்துக்குளிக்க வாரியளா போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.
பக்திப் பாடல்கள்
பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். எழுபதுகளின் பிற்பகுதியில் இளையராஜாவின் வருகையுடன் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வந்தார்.
உசாத்துணை
- வானொலி மஞ்சரி, நவம்பர் 1999, கொழும்பு