விட்டுணுவர்தனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஷ்ணுவர்தன்ன் ( ஆங்கிலத்தில் Vishnuvardhana.கன்னடத்தில் : ವಿಷ್ಣುವರ್ಧನ) (1108-1152 ), என்பவன் போசாள மரபைச் சேர்ந்த மன்னனாவான். இவன் கி.பி.1108-இல் தன் அண்ணனான முதலாம் வீர வள்ளாளன் இறந்த பிறகு, மன்னனானான். முதலில், தன் முன்னோர்களைப்போலவே சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்தான். பிட்டி தேவா என அழைக்கப்பட்ட இவன், வைணவ தத்துவாதியான இராமாணுசரால் வைணவராக்கப்பட்டு, "விட்டுணுவர்தனன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டான்.[1]

இவன் தனது ஆட்சி சுயாட்சி பெறவேண்டி மேலைச் சாளுக்கிய மன்னரான ஆறாம் விக்ரமாதித்யனுடன் போராடி அதில் வெற்றிபெற்றான். மேலும் சோழர் மேலாதிக்கத்தில் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கர்நாடகா, கொங்கு நாட்டின் வடபகுதி) பகுதிகளின் சில பகுதிகளைத் தன் அரசுடன் இணைத்துக்கொண்டான்.[2] வரலாற்றாசிரியர்கள் விட்டுணுவர்தனை போசாள மன்னர்களில் சிறந்தவனாகக் கருதுகின்றனர்.

இவன் காலத்தில் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. பல இலக்கியங்களும் படைக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Alkandavilli Govindāchārya (1906), "The life of Ramanujacharya: the exponent of the Visistadvaita philosophy", page 180, Publishers - S. Murthy and Co., Madras
  2. Sen (1999), pp.386-387, p.485
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டுணுவர்தனன்&oldid=2712195" இலிருந்து மீள்விக்கப்பட்டது