இரண்டாம் வீர வல்லாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் வீர வல்லாளன் ( கன்னடத்தில் : ವೀರ ಬಲ್ಲಾಳ 2) (ஆட்சிக் காலம் 1173-1220 ) என்பவன் போசாள மன்னர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்க மன்னனவான். தேவகிரி யாதவர்கள் , தெற்கு கலச்சூரி , மதுரை பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர் ஆகியோருக்கு எதிரான அவனது வெற்றிகள் குறிப்பிடத்தக்கது. வலுவிழக்கும் நிலையில் இருந்த சோழர்களுக்கு உதவியாகப் போசாளர்கள் கைதூக்கிவிட்டனர். [1] இவன் மகன் இளவரசன் இரண்டாம் வீர நரசிம்மன் போரிலும் , ஆட்சியிலும் தனது தந்தைக்கு ஆதரவாக இருந்தான்

சோழருடன் உறவு[தொகு]

இவனது பட்டத்தரசி உமாதேவியும், இவனது மற்றொரு அரசியான சோழமாதேவியும் சோழ இளவரசிகளாவர். இவனது மகள் சோமளதேவியை சோழ மன்னனான மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு மணம் செய்வித்தான்.

குறிப்புகள்[தொகு]

  1. Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. ISBN 81-219-0153-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_வீர_வல்லாளன்&oldid=2712097" இலிருந்து மீள்விக்கப்பட்டது