விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 28, 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபுதை என்பவர் செங்கிசு கானின் ஒரு மங்கோலியத் தளபதி. இவர் உரியாங்கை எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 20 இற்கும் மேற்பட்ட இராணுவப் படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கி, 32 நாடுகளையும், களத்தில் நடைபெற்ற 65 போர்களையும் வென்றுள்ளார். வரலாற்றில் வேறு எந்த தளபதியையும் விட அதிக நிலப்பரப்பை வென்றோ அல்லது தாக்கியோ உள்ளார். மனித வரலாற்றில் மிகப்பெரிய தொடர்ச்சியான நிலப்பேரரசான மங்கோலியப் பேரரசை விரிவாக்கம் செய்வதற்காக இவர் இப்போர்களை நடத்தினார். தகவல் தொடர்பற்ற 13 ஆம் நூற்றாண்டில் ஒன்றுக்கொன்று சுமார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த படைகளை ஒருங்கிணைத்து இயக்கி வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும்...


ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்சு என்பது கிமு 480 முதல் 404 வரையிலான காலத்திய ஏதென்சின் கிரேக்க நகர அரசாகும். பெரிக்கிளீசு காலம் என அழைக்கப்படும் இக்காலம் "ஏதென்சின் பொற்காலம்" என்று அழைக்கப்பட்டது. இது ஏதென்சின் அரசியல் மேலாதிக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாட்டுச் செழிப்பு ஆகியவை நன்கு வளர்ந்த காலம் ஆகும். கிரேக்கத்தின் மீதான பாரசீகப் படையெடுப்பு தோல்வியடைந்த பிறகு, டெலியன் கூட்டணி என அழைக்கப்படும் ஏதெனியன் தலைமையிலான நகர அரசுகளின் கூட்டணி, பாரசீக ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசிய, கிரேக்க நகரங்களை சுதந்திரமாக வைத்திருப்பதற்காக பாரசீகர்களை எதிர்கொண்ட காலகட்டம் கிமு 478 இல் தொடங்கியது. மேலும்...