தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே நுட்பியல் ஒற்றைப்புள்ளி (Technological Singularity) எனப்படுகிறது
மன வரைபடம் மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.
தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம்.