விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 11
Appearance

- 1812 – இலண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் (படம்) கொல்லப்பட்டார்.
- 1857 – சிப்பாய்க் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் தில்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1891 – சப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த உருசிய இளவரசர் நிக்கொலாசு சப்பானியக் காவல்துறையினனின் வாள் வீச்சில் இருந்து தப்பினார். இவர் கிரேக்க, டென்மார்க் இளவரசர்களினால் காப்பாற்றப்பட்டார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: ஒக்கினாவா கரையில் அமெரிக்க வானூர்தித் தாங்கிக் கப்பல் மீது சப்பானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 346 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
- 1998 – 24 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய சிரிக்கும் புத்தர் சோதனைக்குப் பின்னர் முதல்தடவையாக இந்தியா மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.
சுத்தானந்த பாரதியார் (பி. 1897) · எல்லிஸ் ஆர். டங்கன் (பி. 1909) · பி. வி. நரசிம்மபாரதி (இ. 1978)
அண்மைய நாட்கள்: மே 10 – மே 12 – மே 13