இராணி பத்மினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராணி பத்மினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சித்தூரின் பத்மினி

ராணி பத்மினி (Rani Padmini) அல்லது பத்மாவதி (Padmavati, இறப்பு: 1303) இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார். பத்மினி என்றும் அழைக்கப்படும் பத்மாவதி, இன்றைய இந்தியாவின் மேவார் இராச்சியத்தின் 13 முதல் 14 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ராணி ஆவார். 16 ஆம் நூற்றாண்டின் பல நூல்கள் அவளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன, அவற்றில் ஆரம்பகால ஆதாரம் பத்மாவதி காவியம் ஆகும். இது பொ.ச. 1540 இல் மாலிக் முஹம்மது ஜெயசி எழுதிய ஒரு காவிய கற்பனையான கவிதை ஆகும்.[1]

வரலாறு[தொகு]

வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்சி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.

எதிர்த்துப் போரிட முடியாத சுல்தான் போர் தர்மத்தை மீறி தனது ஆட்கள் மூலமாக பின்முதுகில் குத்துகிறான் ராஜபுத்திர மன்னன் அப்போது இறந்து விடுகிறார். அச்செய்தியை அறிந்த ராணி பத்மாவதி தீக்குளித்து இறக்கிறார்.

ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி கூட்டுத் தீக்குளித்து உயிர் துறந்தாள்.[2]

ஜெயசி கதை பின்வருமாறு விவரிக்கிறது: பத்மாவதி சிங்கள இராச்சியத்தின் ( இலங்கை ) அழகான இளவரசி ஆவார். சித்தோர்கார் கோட்டையின் ராஜபுதன ஆட்சியாளரான ரத்தன சென் , கிராமன் என்ற பேசும் கிளியின் மூலம் அவளுடைய அழகைப் பற்றி கேள்விப்படுகிறான். ஒரு சாகச தேடலுக்குப் பிறகு, அவர் திருமணம் செய்ந்து கொண்டு சித்தோருக்கு அழைத்து வந்தார். ரத்தன் சென் டெல்லியின் சுல்தானான அலாவுதீன் கில்சியால் சிறைபிடிக்கப்பட்டார். ரத்தன் சென் சிறையில் இருந்தபோது, கும்பல்னர் தேவ்பால் மன்னர் பத்மாவதியின் அழகைக் கண்டு மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான். ரத்தன் சென் சித்தோருக்குத் திரும்பி, தேவ்பாலுடன் ஒரு சண்டையில் ஈடுபடுகிறார். அதில் இருவரும் இறந்து போகின்றனர். அலாவுதீன் கில்சி பத்மாவதியைப் அடைவதற்காக சித்தோரை முற்றுகையிட்டார். சித்தோர் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, கில்ஜியிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று ராணி பத்மினி என்ற பத்மாவதி உள்ளிட்ட அரண்மனைப் பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்கின்றனர், இதன் மூலம் கில்சியின் நோக்கத்தை தோற்கடித்து அவர்களின் கௌரவத்தைப் பாதுகாத்தனர்.

அவரது வாழ்க்கைப் பற்றி பல எழுதப்பட்ட மற்றும் வாய்வழி பாரம்பரிய கதைகள் இந்து மற்றும் சமண மரபுகளில் உள்ளன. இந்த பதிப்புகள் சூஃபி கவிஞர் ஜெயசியின் பதிப்பிலிருந்து வேறுபடுகின்றன. உதாரணமாக ராணி பத்மினியின் கணவர் ரத்தன் சென் அலாவுதீன் கில்ஜியின் முற்றுகைக்கு எதிராக போராடி இறந்துவிடுகிறார், அதன் பிறகு அவர் ஒரு கூட்டுத் தீக்குளிப்பை நடத்துகிறார். இந்தக் கதைகளில் அவர் ஒரு இந்து ராசபுத்திர ராணியாக வகைப்படுத்தப்படுகிறார், அவர் ஒரு முஸ்லீம் படையெடுப்பாளருக்கு எதிராக தனது கௌரவத்தைப் பாதுகாத்தார். ஆண்டுகளின் காலப்போக்கில் வரலாற்று நபராக மற்றும் பல நாவல்கள், நாடகங்கள், போன்றவற்றிலும், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் கதை நாயகியாக உலா வந்தார் . இருப்பினும், கி.பி 1303 இல் கில்ஜி சித்தோரை முற்றுகையிட்டது ஒரு வரலாற்று நிகழ்வு என்றாலும், பல நவீன வரலாற்றாசிரியர்கள் பத்மினி புராணங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

புராணத்தின் பதிப்புகள்[தொகு]

16 ஆம் நூற்றாண்டின் பல நூல்கள் ராணி பத்மினியின் வாழ்க்கையின் மாறுபட்ட கணக்குகளை வழங்குகின்றன. [3] இவற்றில் முதன்மையானது சூஃபி இசையமைப்பாளர் மாலிக் முஹம்மது ஜெயசியின் அவதி மொழியில் எழுதப்பட்ட பத்மாவதி (பொ.ச. 1540) ஆகும், இது முதலில் பாரசீக எழுத்துக்களில் இயற்றப்பட்டிருக்கலாம். [3] அலாவுதீன் கில்ஜி கி.பி 1302 இல் சித்தோர்கரை கைப்பற்றியதை விவரிக்கும் முஸ்லீம் அரசவையில் இருந்த வரலாற்றாசிரியர்கள் எழுதிய 14 ஆம் நூற்றாண்டின் கணக்குகள் இந்த ராணியைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. [3] 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான சமண நூல்கள் - நபினந்தன் ஜெனுதர், சிட்டாய் சரித்திரம் மற்றும் ராயன் செஹ்ரா ஆகியோர் ராணி பத்மினியைக் குறிப்பிட்டுள்ளனர்.[4] பிராந்திய வாய்வழி மரபில் சுமார் 1500 அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் பலவிதமான புனைவுகள் காணப்படுகின்றன, பல மொழிகளில் காலப்போக்கில் உருவான புனைவுகள் நினைவுகூரப்பட்டு மீண்டும் சொல்லப்படுகின்றன. [3] பின்னர், அவரது கதையைக் குறிப்பிடும் பல இலக்கியப் படைப்புகள் தயாரிக்கப்பட்டன; இவற்றை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம் [3]

74,500 க்கு தரப்பட்ட மதிப்பு[தொகு]

கில்ஜியிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று ராணி பத்மினி என்ற பத்மாவதி உள்ளிட்ட அரண்மனைப் பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 741/2 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.[5]

இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.

ரக்‌சா பந்தன்[தொகு]

ராணி பத்மினி மன்னர் உமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.[6]

பிரபல கலாசாரத்தில்[தொகு]

  • சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜாயசி என்பவர், கிபி 1540ல் இந்தி மொழியில், சித்தூர் ராணி பத்மினி குறித்து பத்மாவதி காவியம் இயற்றியுள்ளார்.[7][8] இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[9]
  • சித்தூர் ராணி பத்மினி என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.
  • ராணி பத்மினி குறித்த பத்மாவத் திரைப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சனவரி, 2018ல் வெளியானது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.chittorgarh.com/rani-padmini.asp
  2. Real & undistorted story of Rani Padmavati - Alauddin Khilji
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Ramya Sreenivasan 2007.
  4. "Khilji did not attack Chittor for Padmini".
  5. இந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 96,97
  6. ரக்ஷா பந்தன்
  7. Who exactly was Rani Padmavati, warrior queen or fictional beauty?
  8. Padmavati, the real story that Malik Muhammad Jayasi told 224 years after Alauddin Khilji's death
  9. The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history

உதவி நூல்[தொகு]

இந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 96,97

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_பத்மினி&oldid=3882646" இலிருந்து மீள்விக்கப்பட்டது