மலபார் கிறித்தவ கல்லூரி
![]() | |
குறிக்கோளுரை | பாகுபாடு இல்லா கல்வி |
---|---|
வகை | அரசு உதவி |
உருவாக்கம் | 1909 |
சார்பு | கோழிக்கோடு பல்கலைக்கழகம் |
முதல்வர் | காட்வின் சாம்ராஜ், டி. பி. |
அமைவிடம் | எம். சி. சி. குறுக்குச் சாலை , , , 673001 , 11°15′51″N 75°46′41″E / 11.2640651°N 75.7779202°E |
வளாகம் | Urban |
இணையதளம் | Malabar Christian College |
மலபார் கிறித்தவ கல்லூரி (Malabar Christian College), என்பது 1909-ல் இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோட்டில் நிறுவப்பட்ட பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]மலபார் கிறுத்தவ கல்லூரியானது, மலபார் பகுதியில் உள்ள இளைஞர்களுக்குப் பாகுபாடு இல்லாமல் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் பேசெல் புராட்டஸ்டன்ட் கிறித்தவ மறைப்பணியாளர்களால் நிறுவப்பட்டது.[1] தொடக்கத்தில் இக்கல்லூரி இரண்டாம்-தரக் கல்லூரியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்ற கல்லூரியாகச் செயல்பட்டது.[2] 1956 முதல் தரக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
கல்வித் திட்டங்கள்
[தொகு]இக்கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் இளநிலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்குகிறது. தற்பொழுது இக்கல்லூரி கோழிக்கோடு பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியாகச் செயல்படுகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனத்தின் "முதல் தரம்" பெற்ற கல்லூரியாக (3.21/4 புள்ளிகள்) அங்கீகாரம் பெற்றுள்ளது.
குறிப்பிடத்தக்க ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள்
[தொகு]- சகோதரன் அய்யப்பன்
- கே. பி. ராமனுன்னி
- சிந்தா ரவி
- பி. வி.அன்வர்
- கே.கே.நீலகண்டன்
- குட்டி
- ஜக்காரியாஸ் அப்ரேம்
- அஞ்சலி அமீர்
- அன்னா ராஜம் மல்ஹோத்ரா
- கீதா ஹிரண்யன்
- பாபு பரத்வாஜ்
- பினு பப்பு
- கிறிசோஸ்டம் அரங்கடன்
- மோனிஷா அர்ஷக்
- கே. கே. ரமா
- ரோஹன் குன்னும்மாள்
- ஆற்றூர் ரவிவர்மா
- வி. பி. பாலகங்காதரன்
- மூர்கோத் ராமுன்னி