பாண்டியன் (நடிகர்)
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பாண்டியன் | |
---|---|
பாண்டியன் | |
பிறப்பு | 5 ஜனவரி 1959 மதுரை, இந்தியா |
இறப்பு | 10 ஜனவரி 2008 (அகவை 49) மதுரை, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1983-2008 |
வாழ்க்கைத் துணை | லதா |
பிள்ளைகள் | ரகு |
பாண்டியன் (இ. ஜனவரி 10, 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடி தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தன.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.
மறைவு[தொகு]
நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 அன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.