பட்டுக்கோட்டை மெய்ஞானமூர்த்தி அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலடிக்குமுளை அருள்மிகு மெய்ஞானமூர்த்தி அய்யனார் கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):மெய்சொல்லியப்பன்
பெயர்:மெய்ஞானமூர்த்தி அய்யனார்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:பட்டுக்கோட்டை,வட்டம் ஆலடிக்குமுளைஎன்னும் ஊரில் நல்வழி க்கொல்லை[1]
சட்டமன்றத் தொகுதி:பட்டுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:மெய்ஞானமூர்த்தி அய்யனார்
குளம்:அய்யனார் குளம்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா சோமாவார நிகழ்வு..லட்சார்ச்சனை நிகழ்வு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பல்லவர்
கோயில்களின் எண்ணிக்கை:சப்த கண்ணி 9 ராவுத்தர்1 முன்னடியான் 1
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:பல்லவர் நாயக்கர்

பட்டுக்கோட்டை மெய்ஞானமூர்த்தி அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் ஆலடிக்குமுளை என்னும் நல்வழிக்கொல்லை ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1] இக்கோவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் #பல்லவர் #நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது.ஆலடிக்குமுளையில் உள்ளடங்கிய நல்வழிக்கொல்லை ,M.N தோட்டம் கிராம கோவில் வருட வருடம் சோமாவார நிகழ்வு நடைபெறுகிறது. மேலும் நல்வழிக்கொல்லை கிராமத்தால் சித்திரை மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் பெண்களால் ஆடி மாதம் விளக்கு பூஜை நடத்தப்படுகிறது மேலும் 1978 ஆண்டு நல்வழிக்கொல்லை வாத்தியார் வீடு கோபால் கோனார் நினைவாக குதிரை கட்டப்பட்டுள்ளது நான்குகரைக்கார்கள் முதல் கரை ஏனாதிவீடு இரண்டாம் கரை வேளாம்வீடு மூன்றாம் கரை தெற்கு தெரு வடக்கிவீடு மேல வீடு நான்காம் கரை தெக்கி வீடு இந்த நான்கு சோமாவாரம் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை நடைபெறும்.ஆடி மாதம் ஆலடிக்குமுளை ஆகாச கண்ணமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு முன்பு அய்யனார் கோவில் சிறப்பு செய்துவிட்டு அதற்கு பிறகு காப்புகட்டும் நிகழ்வு நடைபெறும்.இந்து அறநிலைதுறையில் கமிட்டி தலைவர் உறுப்பினர் நியமனம் ஆலடிக்குமுளை நல்வழிக்கொல்லை MNதோட்டம் கிராமாவாசிகள் மட்டுமே இடம பெறுவார்கள்.இக்கோவில் தஞ்சாவூரில் இருந்து 44 கிலோ மீட்டரும் பட்டுக்கோட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.🙏🙏🙏🙏

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)