தாதாபுரம் மாணிக்கஈஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மாணிக்கஈஸ்வரர் கோவில்
பெயர்
பெயர்:ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:தாதாபுரம், திண்டிவனம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திண்டிவனம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:மாணிக்கஈஸ்வரர்
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:இராசராசசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியார்

தாதாபுரம் மாணிக்கஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

மேலும்  இக்கோயில் இராசராச சோழன் காலத்தில் (கி.பி 1004) கட்டப்பட்ட கோயில்.

இராசராசசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியாரால் தனது சகோதரனான ஆதித்த கரிகாலச்சோழனின் நினைவாக ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் என்ற பெயரில் இக்கோயிலை எடுப்பித்தார் ..

குந்தவை நாச்சியார் தனது திருவுருவ சிலையையும் இக்கோயிலில் இடம்பெற செய்துள்ளார்..

இதற்கான சான்று இக்கோயின் தெற்கே உள்ள தேவா கோட்ட மாடத்து அருகே அழகிய மங்கை ஒருவரின் உருவச்சிலை உள்ளது .இது குந்தவை நாச்சியாரின் சிலை ஆகும்  .

இக்கோயில் இராசராசசோழனின் பத்தொன்பதாம்(19) ஆட்சி ஆண்டில் கட்டப்பட்ட கோயில் [1][சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)