தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலைச்சங்காடு (தலைச்சங்க நாண்மதியம்) | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 11°07′47″N 79°47′07″E / 11.1298°N 79.7854°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | தலைச்சங்க நாண்மதியம் |
பெயர்: | தலைச்சங்காடு (தலைச்சங்க நாண்மதியம்) |
அமைவிடம் | |
ஊர்: | தலைச்சங்காடு |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நாண்மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்) |
உற்சவர்: | வெண்சுடர்ப் பெருமாள் |
தாயார்: | தலைச்சங்க நாச்சியார் |
உற்சவர் தாயார்: | செங்கமலவல்லி |
தீர்த்தம்: | சந்திர புஷ்கரணி |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத்திவ்ய பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கையாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | சந்திர விமானம் |
கல்வெட்டுகள்: | உண்டு |
தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும் இத்திருத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு பெருமான் நாண்மதியப் பெருமாள் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்றாகும்.
அமைந்துள்ள இடம்[தொகு]
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் திருத்தலைச்சங்க நான்மதியம் எனப்படும் இத்திருத்தலம் உள்ளது.
மூலவர், தாயார்[தொகு]

தலைச்சங்க நாண்மதியத்துள்ளான் , தலைச்சங்க பெருமாள் , நாண்மதியப்பெருமாள் , வெண்சுடர்ப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகம். தாயார் தலைச்சங்க நாச்சியார் (சவுந்தர நாயகி) ஆவார்.
தீர்த்தம்[தொகு]
சங்கு தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) .
தல மரம்[தொகு]
புரசு
விமானம்[தொகு]
சந்திர விமானம்.
பெயர்க்காரணம்[தொகு]
பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.
தல வரலாறு[தொகு]
சந்திரன் தக்சனின் 27 மகளை திருமணம் செய்தார் . ஆனால் ரோஹிணியிடம் மிகுந்த அன்பை செலுத்திவந்தார் . இதனை மற்ற 26 மகள்களும் தன தந்தையான தக்கனிடம் கூறி முறையிட்டனர் . இதனால் தக்கன் சந்திரனின் அழகு தேயும் படி சாபமளித்தார். சந்திரன் சாப விமோசனத்திற்காக ஸ்ரீரங்கம் , திருஇந்தளூர் போன்ற பல புண்ணிய திருமால் தலங்களுக்கு சென்று அவரை வழிபட்டுவந்தார் . கடைசியில் இந்த புண்ணிய தளத்திற்கு வந்து எம்பெருமானை வழிபாட்டு சாப விமோர்ச்சனமும் அடைந்தார் . அதனால் இத்தலத்தில் திருமால் சந்திரனை அவனது சாபத்திலிருந்து விடுவித்து அவனை தன் தலையில் சூடினார் . இத்தலத்தில் எம்பெருமான் அழகிய சங்கை ஏந்தியபடியால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை தலைச்சங்க நாண்மதியம் என அழைத்தார். முன்பு, 40 ஆண்டுகாலம் வழிபாடின்றி இருந்த இத்திருத்தலத்தை வடுக நம்பி சீரமைக்க முயன்று, அவருக்குப் பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணி செய்து அமைத்த திருக்கோயிலே இப்போதுள்ளது. 11 நவம்பர் 2014இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.
மங்களாசாசனம்[தொகு]
திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி ஒரே ஒரு பாசுரம் இயற்றி உள்ளார்.
கண் ஆர் கண்ணபுரம் ....
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நான் மதியை
விரிகின்ற வெம் சுடரை
கண் ஆரக் கண்டு கொண்டு கழிக்கின்றது
இங்கு என்று கொலோ