ஜி. கே. ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணபதி கேசவ ரெட்டி, ( Gunupati Keshava Reddy) ஜி.கே. ரெட்டி (1923-1987) என்று அழைக்கப்படும் ஒரு இந்திய பத்திரிகையாளராவார். இவரது கட்டுரைகள் மற்றும் செய்திகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளார். [1] [2] இவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தி இந்து செய்தித்தாளில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் தனது முதல் பக்க கட்டுரைகளுடன் ஒவ்வொரு வீட்டுப் பெயராக மாறினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ரெட்டி 1923 இல் ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தார். [3]

தொழில்[தொகு]

காஷ்மீர்[தொகு]

1940 களில் அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியராக ரெட்டியின் பத்திரிகை வாழ்க்கை தொடங்கியது. சிறீநகரில் உள்ள பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் நிருபராகவும் ரெட்டி பணியாற்றியுள்ளார். அதன் லாகூர் தலைவர் மாலிக் தாஜுதீனுக்கு அறிக்கை அளித்து வந்தார்.[4] சிறீநகரில் அப்துல் ரகுமான் மித்தாவுக்குச் சொந்தமான மற்றும் வெளியிடப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், பாக்கித்தானுக்கு தனி அரசு அமைப்பத்தற்கு உரிமை வழங்க வேண்டுமென வாதிட்டது. காஷ்மீரில் நடந்த நிகழ்வுகள் குறித்து ரெட்டியின் செய்தி பாக்கித்தானில் மிகவும் மதிப்புமிக்கதாக ஆனது. லாகூர் வானொலியில் தொடர்ந்து இது தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 7 ஆம் தேதியன்று, மகாராஜா ஹரி சிங் அரசு மாநிலத்தில் கடுமையான பத்திரிகை தணிக்கை விதித்து. காஷ்மீர் டைம்ஸிடம் அணுகல் விஷயங்களை வெளியிடுவதை நிறுத்துமாறு கூறினார். செய்தித்தாள் எதிர்ப்பை வெளியிடுவதை நிறுத்தியது. [5] அக்டோபர் நடுப்பகுதியில் ரெட்டி முசாபராபாத்திற்கு அருகிலுள்ள தொமாலில் 10 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். அதன்பிறகு, இவர் இராணுவப் பாதுகாப்பின் கீழ் கதுவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பதான்கோட் எல்லையில் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். [5] மிதாவும் அதே நேரத்தில் வெளிவந்து பாக்கித்தானுக்கு அனுப்பப்பட்டார். மேலும் இவர் முஸ்லீம் மாநாட்டுத் தலைவர் சர்தார் இப்ராகிமுடன் இணைந்து மகாராஜாவின் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தினார்.[4]

ரெட்டி அக்டோபர் 19 அன்று லாகூருக்குச் சென்றார்.[6] இந்தியாவிலும் பாக்கித்தானிலும் ஒரு ஐக்கிய நிறுவனமாக இருந்த பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவில் பணியாற்றினார். (ஆனால் பின்னர் இது இந்தியா பிரஸ் டிரஸ்ட் மற்றும் பாக்கிஸ்தானின் பிரஸ் டிரஸ்ட் எனப் பிரிந்தது). மகாராஜாவின் அரசாங்கத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதால் ரெட்டி கோபமடைந்தார். அக்டோபர் 26 அன்று, இவர் லாகூரை தளமாகக் கொண்ட தினசரி சிவில் & மிலிட்டரி கெஜட் என்ற இதழுக்கு ஒரு விரிவான நேர்காணலை வழங்கினார். அங்கு ஜம்மு மாகாணத்தில் நிராயுதபாணியான முஸ்லிம்களுக்கு எதிரான டோக்ரா வன்முறையின் வெறித்தனமான களியாட்டத்தை விவரித்தார். [7]

லாகூரில் இருந்தபோது, 1947 அக்டோபர் 21, அன்று, ரெட்டிக்கு லெப்டினன்ட் கேணலிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ராவல்பிண்டியில் உள்ள பாக்கித்தான் இராணுவ தலைமையகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் அலவி, அன்றிரவு காஷ்மீரின் ராம்கோட் தாக்கப்படுவதாகவும், இந்தச் செய்தி பாலந்த்ரியில் உள்ள ஆசாத் காஷ்மீர் தலைமையகத்திலிருந்து வருவதாக வெளியிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். படையெடுப்பு பற்றிய மேலும் அனைத்து செய்திகளும் ராவல்பிண்டி தலைமையகத்திலிருந்து வரும் என்றும், பலாந்த்ரி காலமுறை நடைமுறையை பராமரிக்க வேண்டும் என்றும் இவரிடம் கூறப்பட்டது.[8]

இந்தியா[தொகு]

ரெட்டி 1948 முதல் 1951 வரை பிளிட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக இவர் கட்டுரைகளை எழுதினார்.இவரது பத்திரிகை அங்கீகாரம் இரண்டு முறை அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது. [9] பிளிட்ஸில் இருந்தபோது, தில்லியின் முன்னேற்றங்கள் குறித்து நகைச்சுவையான தகவல்களுடன் "டெல்லி டெய்லி" என்ற கட்டுரையையும் ரெட்டி எழுதினார். [10]

மரியாதைகள்[தொகு]

  • 1957 ஆம் ஆண்டில் நெய்மன் பத்திரிகைக்கான அறக்கட்டளையிலிருந்து கூட்டாளி கௌரவத்தைப் பெற்றவர்.[11]
  • இவருக்கு ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் சிறீவெங்கடேஸ்வர பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின.
  • 1986 ஆம் ஆண்டில் சென்னை, சிறீ ராஜா-லட்சுமி அறக்கட்டளை இவருக்கு ராஜா-லட்சுமி விருது வழங்கியது.

இவரது நினைவாக, சிறந்த பத்திரிகைக்கான ஜி. கே. ரெட்டி நினைவு விருது டி. சுப்பராமி ரெட்டியால் நிறுவப்பட்டது.

மரணம் மற்றும் நினைவு[தொகு]

ரெட்டி 1987 இல் நியூயார்க் நகரில் புற்றுநோய் காரணமாக இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Rao 2000.
  2. "GK Reddy memorial award panel reconstituted". The Hindu. 26 June 2014. http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/gk-reddy-memorial-award-panel-reconstituted/article6152433.ece. பார்த்த நாள்: 1 November 2014. 
  3. Bhagyalakshmi 1991.
  4. 4.0 4.1 Mir Abdul Aziz, Good old days பரணிடப்பட்டது 2017-02-18 at the வந்தவழி இயந்திரம், Greater Kashmir, 3 January 2011.
  5. 5.0 5.1 Snedden 2013.
  6. De Mhaffe, A. (1948), Road to Kashmir, Lahore: Ripon Print. Press: "Mr. G. K. Reddy, former Editor of the Kashmir Times who has been externed from Kashmir for advocating the State's accession to Pakistan, arrived in Lahore on Sunday."
  7. Snedden 2013, ப. 51-52.
  8. Singh, Brigadier Jasbir (2013). Roar of the Tiger: Illustrated History of Operations in Kashmir by 4th Battalion. Vij Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9382652035. https://books.google.co.uk/books?id=9mcXVjswUrcC&pg=PA4. 
  9. Bhagyalakshmi 1991, ப. 424.
  10. Bhagyalakshmi 1991, ப. xxiii.
  11. Recipients of Nieman Fellowships.

நூற்பட்டியல்[தொகு]

  • Bhagyalakshmi, J., ed. (1991), Capital Witness: Selected Writings of G. K. Reddy, New Delhi: Allied Publishers, ISBN 9788170233169 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Rao, R. Ananta Padmanabha (2000), G. K. Reddy, Dhilli Andhra Pramukhulu (in Telugu), Hyderabad: Potti Sriramulu Telugu University {{citation}}: Invalid |ref=harv (help)CS1 maint: unrecognized language (link)
  • Snedden, Christopher (2013), Kashmir: The Unwritten History, HarperCollins India, pp. 51–52, ISBN 9350298988
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கே._ரெட்டி&oldid=3813605" இலிருந்து மீள்விக்கப்பட்டது